Posts

தமிழியக்கம் ஓய்ந்ததே! – மறைமலை இலக்குவனார்

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         26 July 2021         No Comment தமிழியக்கம் ஓய்ந்ததே!   இல்லாகியரோ காலை மாலை அல்லாகியர் யாம் வாழும் நாளே! நில்லா உலகில் நிலைத்த புலமையும் எல்லாத் துறையிலும் நிறைந்த அறிவும் பல்லாயிரம் நூல் படைத்த திறமும் ஓருருவாக ஒளிமிளிர்ந்தனரே! கூர்த்த நுட்பமும் சீர்த்த மதியும் ஆர்த்த சொல்வன்மையும் வாய்த்த இவரை அனைத்துத் தமிழரும் உச்சிமேற் போற்றினர்; காழ்த்த சிந்தை கடனெனக் கொண்டு பாழ்த்த கூற்றுவன் உயிர்பறித்தனனே! மாணவர் தமக்கெலாம் மாசறு விளக்காய் புலவர்க்கெல்லாம் பொலிவுறு தலைவராய் இலக்கிய ஆர்வலர்  கலக்கம் போக்கித் துலங்கிடும் கலங்கரை விளக்கமாகவே வாழ்நாளெல்லாம் வயங்கிய மாமணி; தமிழ்ப்பகை களைந்திடும் கொள்கை வைரம்; ஆசான் இளங்குமரன் யாண்டுளர் கொல்லோ? மாசிலாத் திங்களாய்த் திகழொளி முகமும் ஆசிலாச் சுடராய் வழிகாட்டும் அறிவும் உய்விலாத் தமிழனை உயர்த்திடும் இயக்கமும் எங்கே மறைந்தன? உரைப்பீர் எமக்கே! பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார்

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 17

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         26 July 2021         No Comment ( அகல்   விளக்கு  –  மு . வரதராசனார் . 16.  தொடர்ச்சி ) அகல்   விளக்கு பள்ளிக்கூடம் திறந்தவுடன் நானும் சந்திரனும் மேல் வகுப்பில் உட்கார்ந்தோம். அங்கே தலைமையாசிரியர் வந்து, ‘சந்திரன்!’ என்று பெயரைக் கூப்பிட்டு, அவனிடம் வந்து முதுகைத் தட்டிக்கொடுத்தார். “எல்லாப் பாடத்திலும் இவன்தான் முதன்மையான எண்கள் வாங்கியிருக்கிறான். இவன் எதிர்காலத்தில் மிகச் சிறந்து விளங்குவான். நம் பள்ளிக்கூடத்துக்கும் இவனால் நல்ல பெயர் கிடைக்கும். இப்படியே படித்து வந்தால், அடுத்த ஆண்டில் பள்ளி இறுதி வகுப்பில்(எசு.எசு.எல்.சி.யில்) மாநிலத்திலேயே முதல்வனாகத் தேறமுடியும். மற்ற மாணவர்கள் இவனைப் போல் பாடுபட்டுக் கற்கவேண்டும்” என்று பாராட்டிவிட்டுச் சென்றார். அந்தப் பாராட்டில் பாதி எனக்குக் கிடைத்ததுபோல் நானும் மகிழ்ந்தேன். சந்திரன் என் பக்கத்தில் உட்காருவது பற்றியும், என் தெருவில் குடியிருப்பது பற்றியும், என் நண்பனாக இருப்பது பற்றியும் பெருமை கொண்டேன். அந்த வக...

அரங்கனின் குறள் ஒளி : 6 : சீரழிவைத் தரும் சிற்றினச் சேர்க்கை: 5/5

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         24 July 2021         No Comment சீரழிவைத் தரும் சிற்றினச் சேர்க்கை 5/5 பேராசிரியர்   வெ . அரங்கராசன் புறச்சான்று – 11: காசி மன்னனின் தேர் இமயமலையை நோக்கி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. வாழ்க்கைமேல் கூடாத வெறுப்புக் கொண்டிருந்தான். அவன். தற்கொலை செய்துகொள்ளச் சென்றுகொண் டிருந்தான். “எல்லாம் இருந்தும், எதுவும் இல்லை” என்னும் மனநிலையில் இருந்தான்; மனத்தில் அமைதி  இல்லை. குழப்பமான சிந்தனைகளுடன் பயணத்தைத் தொடர்ந்தபோது, ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த ஒரு மாமனிதரைப் பார்த்தான் மன்னன். எளிமையாக இருந்தார் அவர். அவரது  முகத்தில்  மகிழ்வும் அமைதியும் மலர்ந்திருந்ததை வியப்புடன் நோக்கினான். தன் மரணத்திற்குமுன் இந்த மனிதரிடம் ஆறுதலாகப் பேசிக் கொண்டிருக்கலாம் என நினைத்தான். தேரை நிறுத்தி, இறங்கி வந்தான். தம் மூடிய விழிகளை மெல்லத் திறந்தார் அந்த மாம னிதர். தம் முன்னர் நின்ற மன்னனைப் பார்த்தார். “என்ன வேண்டும்?” என அன்பாகக் கேட்டார். “நான் ஒரு மன்னன். எல்லாம் இருந்தும்; ஏதும் இல்லாத...

அரங்கனின் குறள் ஒளி : 6: சீரழிவைத் தரும் சிற்றினச் சேர்க்கை 4/5

Image
அகரமுதல   இலக்குவனார் திருவள்ளுவன்         23 July 2021         No Comment சீரழிவைத் தரும் சிற்றினச் சேர்க்கை 4/5 பேராசிரியர்   வெ . அரங்கராசன்   புறச்சான்று – 7: சேராத இடந்தன்னில் சேர வேண்டா; சேர்ந்து பலதுயரோடு வாழ வேண்டா:             செல்வர் நல்லகத்தான் தம் மகன் திருச்செல்வனைச்  செல்லமாக வளர்த்துவந்தார். அவனும் எந்த வகைக் கவலையும் இல்லாமல், கண்டவர்களோடு பழகினான். கண்டபடி ஊர் சுற்றி வந்தான். மகன் கெட்டுப் போய்விடுவானோ என்ற அச்சம் செல்வருக்கு வந்தது. தீய நண்பர்களோடு அவன் பழகாமல் இருக்க  என்ன செய்யலாம் என இரவு, பகல் தூங்காமல் சிந்தித்து வந்தார். இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தார்.             ஒரு நாள் மகனிடம்  ஆரஞ்சு ப் பழங்களை வாங்கி வரச் சொன்னார். அவனும் வாங்கி வந்தான். அதில் ஒரு பழம் மென்மையாக அழுகி இருந்தது. மகன் அந்தப் பழத்தைத் தூக்கி எறியப் போனான். செல்வர் நல்லகத்தான் அவனைத் தடுத்துவிட்ட...

அரங்கனின் குறள் ஒளி : 6: சீரழிவைத் தரும் சிற்றினச் சேர்க்கை 3/5

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         21 July 2021         No Comment சீரழிவைத் தரும் சிற்றினச் சேர்க்கை 3/5 பேராசிரியர்   வெ . அரங்கராசன் அகச்சான்று – 2: சேரக் கூடாத சிற்றினத்துச் சிறுசேர்க்கை; தீராத் துயரங்களைச் சேர்க்கும் வாழ்க்கை: பேரினத்துப் பேராசான் செந்நாப் போதார்  செதுக்கிய சிற்றினம் சேராமை என்னும் 46ஆவது அதிகாரத்தில் சிற்றினம் சேராமையால் விளையும் நன்மைகளை விளம்புகின்றார். சிற்றினம் சேர்வதால், சேரும் தீமைகள் எவை என்பதைச் சொல்ல வேண்டும் அல்லவா? அதற்காக அந்த அதிகாரத்தில்  உள்ள 10 குறட் பாக்களுக்குப் பாடுபொருள்வழியிலும் பெறப்படு பொருள்வழியிலும் பொருள்  உரைகள் வரையப்பட்டுள்ளன.  அவற்றின்வழிச் சிற்றினச் சேர்க்கையால் சேரும் தீமைகள் எவை என்பன பற்றி இங்குச் சொல்லப்பட்டுகின்றன.  சிறுமைக் குணத்தார் சிறுமைக் குணத்தாரையே உறவர்களாக் கொண்டு, சூழ்வர். [குறள்.451] அதனால் கேடுகளில் ஆழ்வர். சிற்றறிவாளரோடு சேர்ந்தவர், சிற்றறிவையே பெறுவர். [குறள்.452] அறிவு வளர்ச்சியும் அமையாது. சிற்றினத்தனோடு சேர்ந்தவ...