Posts

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 9

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         22 June 2021         No Commen t (அகல் விளக்கு – மு.வரதராசனார்: 8. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 4   சந்திரன் பள்ளியில் சேர்ந்த மறுநாள் அவனுடைய தகப்பனார் சாமண்ணா வாலாசாவுக்கு வந்தார். புத்தகம் முதலியவை வாங்குவதற்குப் பணம் கொண்டு வந்திருந்தார். சந்திரன் எங்கள் வீட்டுக்கு வந்து, “எங்கள் அப்பா வந்திருக்கிறார். உன்னைப் பார்க்கணும் என்றார், வா” என்று கையைப் பிடித்து அழைத்துச் சென்றான். சாமண்ணா கூடத்தில் ஒரு பாயின் மேல் உட்கார்ந்திருந்தார். என்னைப் பார்த்ததும், “வா’ப்பா நீயும் நான்காம் பாரம் படிக்கிறாயாமே, நல்லா படி; ஒருவருக்கொருவர் துணையாக இருங்கள்” என்றார். பக்கத்தில் உட்காரச் சொல்லி, முதுகைத் தடவிக் கொடுத்து, “கெட்ட பிள்ளைகளோடு சந்திரன் சேராதபடி பார்த்துக்கொள். பள்ளிக்கூடம் உண்டு, வீடு உண்டு என்று இருக்க வேண்டும்.  சினிமா , ஓட்டல்  என்று அந்தப்பக்கம் இந்தப்பக்கம் நுழையக் கூடாது. படித்து முன்னுக்கு வரவேண்டும். சந்திரன் ஏதாவது தப்பாக நடந்தால், அத்தையிடம் சொல்லிவிடு. ...

அரங்கனின் குறள் ஒளி: 3. துன்பம் செய்தார்க்கும் இன்பம் செய்க!:1/2

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         15 June 2021         No Comment 3.  துன்பம் செய்தார்க்கும் இன்பம் செய்க!:1/2   பேராசிரியர் வெ.அரங்கராசன் துன்பம் செய்தார்க்கும் இன்பம் செய்து, பண்பில் உயர்ந்து பார்புகழைப் பெறுக!     இன்னாசெய் தாரை ஒறுத்தல், அவர்நாண, நல்நயம் செய்து விடல்                                                          [குறள்.314]   பொருள்கோள் விரிவாக்கம்: இன்னா செய்தாரை ஒறுத்தல் வேண்டும்;             அவர் [இன்னா செய்தார்] நாண நல்நயம் செய்தல்            வேண்டும்;        ...

நீர்வளத் தேவையை உணர்ந்த சங்க மன்னர்கள் – பேரா.சி.இலக்குவனார்

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         14 June 2021         No Comment இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 14 – சி.இலக்குவனார் ( இலக்கியம்   கூறும்   தமிழர்    வாழ்வியல்  ( சங்கக்   காலம் )  13–   தொடர்ச்சி )   வெள்ளைக்குடி நாகனார் என்ற பெரும் புலவர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் கண்டு “ அரசே ! அறக் கடவுளே வந்து ஆட்சி செய்வது போன்று செங்கோன்மை செலுத்துவதில் கருத்து கொண்டு, மக்கள் முறை வேண்டும்பொழுதில் செவ்வி எளியராய் இருப்போர், வேண்டும் காலத்தில் மழை பெறுவர்.  நல்லாட்சியின் அடையாளமாகப் பெற்றிருக்கும் பெருங்குடை வெயிலை மறைப்பதற்காக அன்று;  குடிமக்களின் குறைகளைத் தடுப்பதற்குரிய அடையாளமாகும். போர்க்களத்தில் பகைவரை வென்று போர்ப்படை அடையும் வெற்றி உழவரின் உழுபடையால் உண்டாவதாகும்.  மக்களுக்குப் பலவகை இன்னல்கள் தோன்றும் போதெல்லாம் இவற்றிற்குக் காரணமானோன் அரசனே என்று உலகம் பழித்துரைக்கும்.  ஆதலின், குடிமக்களை நன்கு புரந்தருளுக....

நல்லரசை விளக்கும் சங்க இலக்கியம் – பேரா.சி.இலக்குவனார்

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         13 June 2021         No Comment இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 13  ( இலக்கியம்   கூறும்   தமிழர்    வாழ்வியல்  ( சங்கக்   காலம் )  12–   தொடர்ச்சி ) அரசாள்வோன் மகன் அரசனாக அமரும் வழிமுறைக் கொள்கை பிற்காலத்தே நிலைத்துவிட்ட போதிலும் பண்டைத் தமிழகத்தில் அரசமரபு என ஒரு மரபு இருந்திலது. அரசாள்வோர் அரசர் எனப்பட்டனரே யன்றி அரசாளும் மரபிற் பிறந்தோர்க்குத்தான் அரசு உரியது எனக் கருதினாரிலர். வடநாட்டில் இராசனுக்குரியது இராச்சியம் எனக் கருதப்பட்டதேயன்றி ‘இராச்சியம்’ புரிவோன் ‘இராசன்’ என்று கொள்ளப்பட்டிலது.  அங்கு அரசாளுவதற்குரிய மரபு எனச் சத்திரியர் மரபு தோன்றியதுபோல் தமிழகத்தில் தோன்றிலது.  தமிழ்ச்சொல்லாம் ‘அரசன் ’ என்பதே வடமொழியில் ‘இராஜன்’ ஆக உருப்பெற்றது.  சிலர் கருதுவதுபோல் ‘இராஜன்’  ‘அரசன்’ ஆகவில்லை. ஆளும் முறையால் அரசர் எனப்பட்டோர் தாமே தம் உளம் சென்ற வழி நாட்டை ஆண்டிலர்.  ஐம்பெருங்குழுவும்...