Posts

அவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         01 May 2020         No Comment அவலநிலையில்   அல்லல்படும்   தொழிலாளிகள் வெட்டவெளிப் பொட்டலிலும் வேக்காடு வேனலிலும் கொட்டும்மழை குளிரினிலும் கொடுநோயின் பிடியினிலும் வட்டமிட்டே உழைத்தாலும் வாழ்நாள் முழுவதிலும் தட்டுக்குச் சோறின்றி தடுமாறும் உழைப்பாளி! எட்டு மணிநேரம் என்பதெலாம் பொய்ச்சட்டம் கிட்டும் நேரம்வரை கிழட்டுப் பருவம்வரை திட்டமிட்டே உழைக்கின்ற தேசத்தின் முதுகெலும்பு பட்டம்பதவி விரும்பாத பாசத்தின் அச்சாணி இங்கே… வருக்க பேதங்கள் வாதங்கள் மாறியதா? சொர்க்கம் நரகமென்ற சோதனைகள் குறைந்தனவா? இருப்போர் இல்லாதோர் இரண்டுநிலை மாறியதா? கற்போர் கல்லாதோர் கல்விபேதம் அழிந்ததுவா? கொரோனா கூட இன்று கொள்ளைநோய் என்றாலும் இருப்பவர்க்குப் பெரிதாக இன்னல் தரவில்லை இருப்பு இருப்பதனால் இல்லத்தில் இருந்திடுவார் விருப்பப் பட்டதையும் வாங்கித் தின்றிடுவார் அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடும் தினக்கூலி பஞ்சாய் அலைகின்ற பாவந...

தோழா கலங்காதிரு! – சி. அன்னக்கொடி

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         01 May 2020         No Comment தோ ழா   கலங்காதிரு தோழா விடிகாலைப் பொழுது நமெதென எழுந்திரு தோழா! சோதனைகள்தான் புதுசா தோழா வேதனைகள்தான் பழசா தோழா வியர்வை சிந்தி உழைத்திடும் நமக்கு வேலையில்லை என்பதைவிட வேறென்ன கவலை தோழா! அடுப்பங்கரையில் எலியும் அடுப்பில் துரு ஏறியிருப்பதைவிட வேறென்ன கவலை தோழா! வயிறொன்று இருப்பதை அறியாமல் நீரற்ற வெறுங்குடத்தை எட்டிப் பார்ப்பதைவிட வேறென்ன கவலை தோழா! தோள்கள் இரண்டும் உழைப்பிற்காய் தினவெடுத்து திரிகின்றன என்பதைத் தவிர வேறென்ன கவலை தோழா! இல்லாள் மையிடாமல் மலர்சூடாமல் இருக்கிறாள் என்பதைவிட வேறென்ன கவலை தோழா! உயிர் வாழ்வதற்காய் ஒரு பொட்டலத்துக்காய் காத்திருப்பதைவிட வேறென்ன கவலை தோழா! சோதனைகள்தான் புதுசா தோழா. வேதனைகள் தான் பழசா தோழா. காரிருள் அகல கதிரவன் வருவான் கவலையைவிடு தோழா! –  வழக்குரைஞர் சி. அன்னக்கொடி  

புதை நூல் – தமிழரசி இளங்கோவன்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         28 April 2020         No Comment புதை நூல்             “மங்களத்து நாயகனே, மண்ணாளும்..”, என்ற அம்மாவின் பக்திக் குரல் தூபம் காட்டியவாறே வீட்டை வலம் வந்தது. வீடே புகை சூழ இருந்தது.      ‘டப்,டப்,டப்..’, என்று கோழித் தீனியைக் கொத்துவது போல் கமலாவின் அறையிலிருந்து ஒலி எழும்ப, அம்மா,  கமலா  அறையின் கதவைத் திறந்து தூபம் காட்டும் பெயரில் அறையையும் விட்டு வைக்காமல் ஒரு வலம் வந்தார். கண்கள் கமலாவின் கணினியை வலம் வந்தது.      செய்தி கமலா அப்பாவின் காதுக்கு எட்ட, “கமலா, கமலா!”, என்று அழைத்தார். தோழியோடு முகநூலில் அளவளாளவுவதாக இருந்த கமலா அப்பாவின் குரல் கேட்டு வெளியேறும்போது ‘சதக்’ என்று தனது காலின் சுண்டுவிரலை இடித்துக் கொண்டாள். வலியோடு வரவேற்பறையின் வழிக்கு வந்து நின்றாள், “சொல்லுங்க, அப்பா”, என்று கூறியவாறே! “உட்காருமா’, என்று அப்பா கூற, “பரவாயில்லை அப்பா. சொல்லுங்கள் அப்...

கனலே சொரியும் கவியே! – அரிஅரவேலன் யரலவழள

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         22 April 2020         No Comment கனலே சொரியும் கவியே!  பாவேந்தர் மெய்ப்புகழ் வண்ணம் தனனே தனன தனனே தனன தனனே தனன தனனே தனன தனனே தனன தனனே தனன தனதனனே அனலே பொழியும் மொழியே இதழில் உளதோ எனயெம் உளமே வியக்க வளமே விளையும் ஒலியே உறையும் உளந்தனிலே இனமே உயர எழிலே உலவ கனலே சொரியும் கவியே தமிழில் தினமே புனையும் திருவே எந்தம் கனகசுப்பே புயலே எழில்மிகு  வடிவே எடுத்தெம் புயமே துடிக்கும் படிநீ வடித்த கவியே தமிழின் முடியே எனயாம் திளைத்தனமே வளமே தமிழர் நலமே வியையுன் கவியே சுவைநிறை மதுவோ? தமிழர் மறமோ? குளிரும் புனலோ? எது வென் றறிந்திலமே! அரிஅரவேலன் யரலவழள (பாவேந்தர் நூற்றாண்டில் எழுதிய செய்யுள்)

மரம் தான் காற்றின் தாய்! – வித்தியாசாகர்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         20 April 2020         No Comment மரம் தான் காற்றின் தாய்! -எனது அண்ணன் தம்பிகள் அக்காத் தம்பிகள் போல அருகாமை மரங்களும் உறவு மிக்கவை மரங்களிடம் பேசுங்களேன் மரங்களும் பேசும் மரங்களின் மொழி மனத்தின் மொழியாகும் மனத்தின் மொழி மறந்தோரே மரங்களை வெட்டுகையில் வீழ்வது மரங்கள் மட்டுமல்ல நாமும் தானே? உங்களுக்குத் தெரியுமா மரங்கள் தான் நமக்கு முன்னோர் மரம் தான் நமக்குக் கூடு மரம் தான் மேசை மரம் தான் ஆடை மரம் தான் பாடையும்; நமக்கு முதலெழுத்தும் கடையெழுத்தும் மரம் தான் மரம் தான் நமக்கு எல்லாம் மரம் தான் வீடு மரம் தான் மேளம் மரத்தால் தான் நமக்குக் கவிதையும் வாசிக்கக் கிடைக்கிறது, உயிரென்பது காற்று எனில் மரம் தான் காற்றின் தாய் எனவே மரத்தைக் காப்போம் தோழர்களே நாளுக்கொரு மரம் நடாவிட்டால் பரவாயில்லை  வெட்டாதிருங்கள் போதும்!   வித் தி யாசாகர் பகிரி :  09840502376 ;  பேசி:  +965 97604989

காலத்தின் குறள் பெரியார் : 11 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         19 April 2020          No Comment (காலத்தின் குறள் பெரியார் : 10 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன் தொடர்ச்சி காலத்தின் குறள் பெரியார் அதிகாரம் 11.ஆட்சி 1.அறியாமைத் தீவளர்த்து ஆதிக்கம் புரிவார்   புரியாமல் வாழ்வாய்நீ வீண். 2.மக்களைப் பேணாமல் மாக்களைப் பேணுதல்   மக்களாட்சி என்னல் இழிவு. 3.வெள்ளையர் கொள்ளையர் செய்த உடன்படிக்கை   மக்களாட்சி மாற்றுப் பெயர். 4.உணவுஇடம் ஓர்ஆடை இல்லார் இருப்பை   உணராத ஆட்சி எதற்கு.    5.கெடுதலைச் செய்யும் அரசின்கீழ் வாழ்ந்தால்   விடுதலை மாந்தரா நாம்.       6.இப்பொறுப்பால் தான்வாழ எண்ணான் எனத்தெளிந்து   அப்பொறுப்பில் நீயமர்த்து வாய். 7.இடித்துரைப்பார் சொல்வதை ஏற்றிடும் ஆட்சி   கெடுத்துரைக்க வல்லவன் யார்.                                    8.தலையாட்டும் பொம்மையாய் வாழ...

மணம் ஆகாமலே மணவிலக்கு! – ஆற்காடு.க.குமரன்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         18 April 2020         No Comment மணம் ஆகாமலே மணவிலக்கு! நினைவுகளைக் காவலுக்கு வைத்துவிட்டு நீயெங்கு சென்றாயடி…….? நிழலாய்த் தொடரும் உன் நினைவுகளால் உழலுகிறேன் நீங்காது….. காவல் காக்கும்  உன் நினைவுகள் கல்லறை வரை காத்திருக்கின்றன மீட்க வரவில்லை மீளாத்துயரில் ஆழ்கின்றன! நினைவுகளை அடைமானம் வைத்து விட்டு வெகுமானம் தேடி நீ சென்றது  காதலுக்கு அவமானம! நினைவுப் பிள்ளையோடு கைம்பெண்ணாய் காத்திருக்கிறேன் மணம் ஆகாமலே மணவிலக்கு பெற்ற நீ விரும்பிய காதலன்!. இவண் ஆற்காடு.க.குமரன் 9789814114