பெரியார் படி – சு.ஒளிச்செங்கோ
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 23 ஏப்பிரல் 2019 கருத்திற்காக.. பெரியார் படி “பெரியார் எனும் சொல் இணைப்பரும் பெருமையையும், ஒப்புச் சொல்வதற்கு அரிய பெருமையுடையவர் என்பதை உணர்த்தும் சொல்லாகும். அச்சொல் சுட்டும் பொருளுக்கு ஏற்பவே பெரியார் திகழ்ந்தார்; இன்றும் ஒளிர்ந்துவருகிறார். பொருள் புலப்பட பொருள் தோன்ற கூறுதலை புலன்வனப்பு என்பர். அந்த அரிய புலன்வனப்பைப் பெரியாரின் எழுத்திலும், பேச்சிலும் காணலாம். பெரியாரின் உரைநடை என்பது தனி வகைப்பட்ட உரை நடை வண்ணமாகும். எந்த தமிழ்ப் புலமையாளர்களுக்கும் வாய்க்கப் பெறாத – பெரியாருக்கு மட்டும் இயல்பாக வாய்க்கப்பெற்ற பெரும்பேறாகும். கழுத்துப் பிடி கொடுத்தாலும், எழுத்துப்பிடி கொடுக்கக்கூடாது என்பது கொங்கு நாட்டு சொலவமாகும். பெரியார் பேசும்போதும், எழுதும்போதும் சொற்களின் புலப்பாட்டைத் தெரிந்துகொண்டு எழுத்துப் பிடி கொடுக்காமல் எழுதவும் பேசவும் வல்லவர். அவரது எழுத்திலும் பேச்சிலும் எண்ணற்ற பழமொழிகளைக் காணலாம். அவை சுவைமிக்கதாகவும், சுட்டுர...