Posts

அகநானூற்றில் ஊர்கள் 3/7 – தி. இராதா

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         12 நவம்பர் 2018         கருத்திற்காக.. ( அகநானூற்றில் ஊர்கள் 2/7 இன் தொடர்ச்சி அகநானூற்றில்    ஊர்கள் -3/7   ஆலங்கானம்  ( தலையாலங்கானம் )    ஆலங்கானம் என்பது தலையாலங்காடு என்று வழங்கப்படுகிறது. தொண்டை நாட்டிலுள்ள இவ்வூர் தேவாரப்பாடல் பெற்ற தலமாகத் திகழ்கின்றது. பாண்டிய நெடுஞ்செழியனின் பகைவரான நெடுநில மன்னனான சேரர், சோழர் இருவரும் குறுநில மன்னரான நிதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன் ஆகிய ஐவரையும் போரில் வென்றதால் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்று சிறப்பிக்கப்பட்டான்.                  “…… கொடித்   தேர்ச்   செழியன்                  ஆலங்கானத்து   அகன்   தலை   சிவப்ப          ...

அகநானூற்றில் ஊர்கள் – 2/7: – தி. இராதா

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         04 நவம்பர் 2018         கருத்திற்காக.. அகநானூற்றில்    ஊர்கள்  – 2/7 அழுங்கல்       பல விழுதுகளைக் கொண்ட ஆலமரத்தில் அமர்ந்திருக்கும் பறவைகளின் ஒலியைக் கொண்ட ஊர் அழுங்கல் ஆகும்.       “ பல்வீழ்   ஆலப்போல       ஓலி   அவிந்தன்று   இவ்   அழுங்கல்   ஊரே ”  ( அகநானூறு  70)      “ என்னும்   நோக்கும்   இவ்   அழுங்கல்   ஊரே ”   ( அகநானூறு  180) என்னும் வரிகள் உணர்த்துகின்றன.       “ அன்றை   அன்ன   நட்பினன்        புதுவோர்த்து   அம்ம   அவ்   அழுங்கல்   ஊரே ” என்று குறுந்தொகையும் அழுங்கல் ஊரின் சிறப்பை எடுத்துரைக்கின்றது.      கரிய கூந்தலையும் திருத்த முறச் செய்த அணிகலன்களை அணிந்த தலைவி வாழும்...