Posts

இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 08– சி.இலக்குவனார்

Image
அகரமுதல 218, மார்கழி 09 - மார்கழி 15,  2048 /   திசம்பர் 24  – திசம்பர் 30,  2017 இலக்குவனார் திருவள்ளுவன்         24 திசம்பர் 2017         கருத்திற்காக.. [இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  07  தொடர்ச்சி] இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல்   ( சங்கக் காலம்)   08–   சி.இலக்குவனார் நகரங்கள்  நாட்டுக்கு அணிகலன்கள் நகரங்களே.  நகரங்கள் ஒரே நாளில் தோன்றிவிடா.  விளைபொருள் மிகுதியாலும் கைத்தொழிற் சிறப்பாலும் கோயில்கள் அமைவதாலும் கப்பல் போக்குவரத்துக்குரிய வசதியாலும் வாணிபப் பெருக்காலும் தலைநகராகும் பேறு உண்டாவதனாலும்  சிற்றூர்கள் பேரூர்களாக வளர்ச்சி பெற்று நகரங்கள் என அழைக்கப்பெறும் .  வளங்கொழிக்கும் பெரிய மாளிகையைக் குறிக்கும் ‘நகர்’ என்னும் சொல்லும் ‘நகரம்’ என்பதன் அடியாகும். ‘நகரம்’ என்பது எவ்வாறு இருக்கும் என்பதை இச் சொல்லின் அடிச்சொல்லே நன்கு விளக்கும். பெரிய மாட மாளிகைகள் நிறைந்த இடமே நகரம் ஆகும் என்று ...

காலத்தின் குறள் – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்

Image
அகரமுதல 218, மார்கழி 09 - மார்கழி 15,  2048 /   திசம்பர் 24  – திசம்பர் 30,  2017 இலக்குவனார் திருவள்ளுவன்         24 திசம்பர் 2017         கருத்திற்காக.. காலத்தின் குறள் அதிகாரம் 1.நூன்முகம் 1.அறிவுறச் செய்தார் பெரியார் அவரைச் செறிவுற ஏற்கும் உலகு. 2.அறிவாசான் சொல்லை அழகுக் குறளில் அறிவிக்கா விட்டால் தவறு. 3.வள்ளுவன் வாய்ச்சொல்லை எண்ணித் துணிந்தேன்நான் தெள்ளுதமிழ் செப்பும் குறள். 4.உள்ளத்தில் உள்ளார் பெரியார் அவரை உலகுக்(கு) உரைக்கும் குறள். 5.உள்ளவரை நல்லமுறை தந்தவரைக் கூறத்தான் வள்ளுவரைப் பின்தொடர்ந் தேன். 6.குறள்வெண்பா கற்றேன் பெரியார் முழக்கக் குரலென்பா கூறிநிற் கும். 7.முடியாது எனவொரு சொல்லை நினையேல் முடியும் பெரியாரைப் பற்று. 8.பெரியார் நெறியைக் குறள்வழிக் கூற அரிதாய் இருக்குமிந் நூல். 9.குறள்கொண்டு கொள்கையைக் கூற முயல்வார் விரல்கொண்டே எண்ணிவிட லாம். 10.உள்ளத்தில் உள்ளதை உள்ளபடிக் கூறிட வள்ளுவப்பா தேர்ந்தெடுத் தேன். – ச.ச.வேலரசு (எ) தமி...

வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 4.

Image
அகரமுதல 217, மார்கழி 02 - மார்கழி 08,  2048 /   திசம்பர் 17  – திசம்பர் 23,  2017 இலக்குவனார் திருவள்ளுவன்         17 திசம்பர் 2017         கருத்திற்காக.. (வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார்:3. தொடர்ச்சி) வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை ங. களவியல்  ( வரிசை எண்கள் / எழுத்துகள் ‘ ங ’ கரத்திலிருந்து குறிக்கப் பெறுகின்றன.)                  ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா இல்வாழ்க்கை                  நோற்பாரின் நோன்மை யுடைத்து  (48)    ஆற்றின் ஒழுக்கி=நல்நெறியில் பிறரை ஒழுகச் செய்து அறன் இழுக்கா=அறநெறியினின்று மாறுபடாத, இல் வாழ்க்கை=இல்லற வாழ்க்கை, நோற்பாரின்=தவம் செய்வாரின் வாழ்க்கையைவிட, நோன்மை யுடையத்து=தாங்கும் தன்மை மிகுதியும் உடையது.    இல்லற நெறியை மேற்கொண்டு மனையாளொடு...

‘காலத்தின் குறள் பெரியார்’ – அணிந்துரை: சுப. வீரபாண்டியன்

Image
அகரமுதல 217, மார்கழி 02 - மார்கழி 08,  2048 /   திசம்பர் 17  – திசம்பர் 23,  2017 இலக்குவனார் திருவள்ளுவன்         17 திசம்பர் 2017         கருத்திற்காக.. காலத்தின் குறள் பெரியார் – அணிந்துரை  ‘காலத்தின் குரல்’ என்றுதான் சொல்லக் கேட்டுள்ளோம். நண்பர்  வேலரசு (எ) தமிழரசன் , தன் நூலுக்குக் ‘காலத்தின் குறள் பெரியார்’ என்று பெயர்  சூட்டியிருக்கிறார்.  நூலைப் படித்துப் பார்த்தபோது,  இதனை விடப் பொருத்தமான வேறு தலைப்பு இருக்க முடியாது  என்று தோன்றியது.  மறைந்த தமிழறிஞர்  வ.சுப.மாணிக்கம்  அவர்கள், குறள்   வடிவிலேயே, 1330 குறட்பாக்களுக்கும் பொருள் எழுதியிருப்பார். அந்த நூலின் முதல் பக்கத்தில், ” பார்த்தால் குறள், படித்தால் பொருள் ” என்று நான் எழுதி வைத்திருந்தேன். அதே போல இந்த நூலும் ‘பார்த்தால் குறள். படித்தால் பெரியார்’ என்று அமைந்துள்ளது. குறள் என்பது யாப்பில் இடம்பெற்றுள்ள ஒரு பா வடிவத்தின் பெயர்தான். ஆனால் வள்ளுவரின் நுண்மாண் நுழை...

இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 07– சி.இலக்குவனார்

Image
அகரமுதல 217, மார்கழி 02 - மார்கழி 08,  2048 /   திசம்பர் 17  – திசம்பர் 23,  2017 இலக்குவனார் திருவள்ளுவன்         17 திசம்பர் 2017         கருத்திற்காக.. [இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  06  தொடர்ச்சி] இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல்  ( சங்கக் காலம்)   07 மக்களுக்கும் மன்னருக்கும் நாட்டுப்பற்று என்பது கருவிலே வாய்ந்த திருவாக இலங்கியது. மக்கள் அனைவரும் அவரவர் கடமையை நன்கு ஆற்றி நாட்டைப் புரத்தலே அவர் தம் தலையாய பணியெனக் கருதினர்.  குழந்தைகளைப் பெற்று நன்கு வளர்த்தலே தன் கடமையென அன்னை எண்ணினாள். எல்லா நற்குணங்களாலும் நிறைந்த பெரியோராக்குதல் தன் கடன் எனத் தந்தை நினைத்தான்.  படைக்கலன்களைப் படைத்துக் கொடுத்தல் தன் பங்கு எனக் கொல்லன் குறிக்கொண்டான்.  நல்லொழுக்கமுடையோராய் வாழச் செய்தல் தன் முறைமை என அரசன் கருதினான். போர்க்களத்தில் களிறுகளை வெட்டி வீழ்த்திப் பகைவரை வெல்லுதல் தமக்குரிய செயல்  எனக் காளை போன்ற இளைஞர் உளங...