Posts

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 5/8 – கருமலைத்தமிழாழன்

Image
அகரமுதல 191, ஆனி 04, 2048 / சூன் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன்      18 சூன் 2017       கருத்திற்காக.. (பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 4/8 –‌ தொடர்ச்சி) பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 5/8 பாலுக்குள்  நெய்பதுங்கி   உள்ள   தன்மை பார்வைக்குத்   தெரியவில்லை   என்ப   தாலே பாலுக்குள்   உள்ளநெய்யும்   பொய்யாய்ப்   போமோ பாட்டிற்குள்  அறிவியலின்   கருத்தை  யெல்லாம் மேலுக்குச்    சொல்லவில்லை   என்ப   தாலே மேடையிலே   இல்லையென்று   முழங்க   லாமா காலங்கள்   வினைத்தொகையில்   உள்ள   போலே கனித்தமிழில்   அறிவியலும்   உள்ள  துண்மை ! பொறியிலின்   நுணுக்கத்தைப்   பாட்டிற்   குள்ளே போற்றியதைத்   தெரியாமல்   மறைத்து...

சுந்தரச் சிலேடைகள் 17 : பெண்மகளும் பெட்டகமும் – ஒ .சுந்தரமூர்த்தி

Image
அகரமுதல 191, ஆனி 04, 2048 / சூன் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன்      18 சூன் 2017       கருத்திற்காக.. சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை  அணி 17 பெண்மகளும் பெட்டகமும்   வாய்மூடிக் கொள்ளுமே, வாய்திறக்க முத்துதிர்க்கும் தூய்மை தனைநாடும், நல்சுமக்கும் – ஏற்புறப் பல்நிலை தானிருக்கும் பாதரு காரிகையே ! வெல்மகளும் பெட்டகமாய் வீடு.  பொருள்: பெண் மகள்: | ) தேவைப்படும் நேரத்தில் அளவாகப் பேசிவிட்டு வாயை மூடிக் கொள்வர். 2) வாய் திறந்தால் வெண்முத்துகளாய்ப் பற்கள் ஒளிரும் . 3) தூய்மையாக இருப்பார்கள். 4) குடும்பப் பொறுப்பை உணர்ந்து குடும்பத்தைத் தாங்கும் தூணாக இருப்பர். 5) பேதை பெதும்பை மங்கை மடந்தை அரிவை தெரிவை பேரிளம் பெண் என்று பல நிலைகள் கொண்டிருப்பர். பெட்டகம்: 1 எந்நேரமும் மூடியே இருக்கும். 2 வாய்(கதவைத் ) திறந்தால் உள்ளிருக்கும் அரும்பொருள் காட்டும் 3 . தூய்மையான ஆடைகளை உள்ளே வைத்திருக்கும். 4) உள்ளிருக்கும் பொருட்களைத் தாங்கும் . 5) பல அடுக்குகளைப் பெற்றிருக்கும். ...

திருக்குறள் அறுசொல் உரை: 132. புலவி நுணுக்கம்: வெ. அரங்கராசன்

Image
அகரமுதல 191, ஆனி 04, 2048 / சூன் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன்      18 சூன் 2017       கருத்திற்காக.. (திருக்குறள் அறுசொல் உரை: 131. புலவி:தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 3. காமத்துப் பால் 15. கற்பு இயல் 132. புலவி நுணுக்கம்  தவறுஇல்லாப் போதும் , கூடல்இன்ப மிகுதிக்காக நுட்பமாய்ச் சினத்தல்              (01-02 தலைவி சொல்லியவை) பெண்இயலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர், நண்ணேன், பரத்த!நின் மார்பு. பெண்களின் பார்வைகளால் கற்பினை இழந்தவனே! உன்னை நெருங்கேன். ஊடி இருந்தேம்ஆத், தும்மினார், யாம்தம்மை,      “நீடுவாழ்” கென்பாக்(கு) அறிந்து. ஊடலில் தும்மினார், “நீடுவாழ்க”என வாழ்த்துவேன் என்று நினைந்து. (03-10 தலைவன் சொல்லியவை) கோட்டுப்பூச் சூடினும் காயும், “ஒருத்தியைக்       காட்டிய சூடினீர்” என்று. மரக்கிளைப் பூச்சூடினும் ஊடுவாள், “ஒருத்திக்குக் காட்டத்தானே”...