Posts

இத்தகையோர் இருப்பதைவிட இறப்பது நன்றே! – பாவேந்தர் பாரதிதாசன்

Image
அகரமுதல 18 8, வைகாசி 14, 2048 / மே 2 8, 2017 இலக்குவனார் திருவள்ளுவன்      28 மே 2017       கருத்திற்காக.. இத்தகையோர்  இருப்பதைவிட இறப்பது நன்றே! வாணிகர்க்கும் தமிழென்றால் வெறுப்புண்டோ? அரசியல்சீர் வாய்க்கப் பெற்றோர் ஆணிகர்த்த பேடிகளோ? அரும்புலவர் ஊமைகளோ? இல்ல றத்தைப் பேணுமற்ற யாவருமே உணர்வற்றுப் போனாரோ? பெருவாழ் வுக்கோர் ஏணிபெற்றும் ஏறாத தமிழர்உயிர் வாழ்வதிலும் இறத்தல் நன்றே. 6 மிகுகோவில் அறத்தலைவர், அறநிலையக் காப்பாளர், விழாவெ டுப்போர், தகுமாறு மணம்புரிவோர், கல்விதரும் கணக்காயர், தம்மா ணாக்கர், நகுமாறு நந்தமிழை நலிவுசெய்யும் தீயர்களோ? நல்வாழ் வுக்கோர் புகும்ஆறு புறக்கணித்தும் தமிழர்உயிர் வாழ்வதினும் இறத்தல் நன்றே. 7 மகிழ்ச்சிசெய வருங்கூத்தர், மாத்தமிழை மாய்ப்பதுண்டோ? வாய்ப்பாட் டாளர், இகழ்ச்சியுற நடப்பதுண்டோ? இசைப்பாடல் ஆக்குபவர் இழிவேன் ஏற்றார்? நகச்சிலசொற் பொழிவாளர் நாணற்றுப் போயினரோ? வாழ்வுக் கான புகழ்ச்சியினைப் போக்கடித்தும் தமிழருயிர் வாழ்வதினும் இறத்தல் நன்றே. 8 கூற்றம...

சுடும்! சுடும்! சுடும்! – மு இராமச்சந்திரன்

Image
அகரமுதல 18 8, வைகாசி 14, 2048 / மே 2 8, 2017 இலக்குவனார் திருவள்ளுவன்      28 மே 2017       கருத்திற்காக.. சுடும்! சுடும்! சுடும்! சுடும் சுடும் நீரும் சுடும் நெருப்பும் சுடும் நேர் நேர் நின்றால் நட்பும் சுடும்! வாயும் சுடும் வரவும் சுடும் வரம்புகள் மீற நிழலும் சுடும் ! காற்றும் சுடும் கவிதைகள் சுடும் கசடரைப் பார்த்தால் நெஞ்சும் சுடும் ! பூவும் சுடும் பொழுதும் சுடும் பொதுவில் நில்லா மன தைச் சுடும் ! அன்பும் சுடும் ஆசையும் சுடும் அழகே இல்லா நடையும் சுடும் ! சுடும் . சுடும் . போரும் சுடும் பொழுது போக்காய் செய்வது சுடும் ! அறமும் சுடும் அறிவும் சுடும் அன்பே இல்லா பொருள்கள் சுடும் ! வேதனை சுடும் வீழ்ச்சிகள் சுடும் வெல்ல நினைத்த நினைவுகள் சுடும்! சுடும் .. சுடும் .. துன்பங்கள் சுடும் துய்க்க மறந்த இன்பங்கள் சுடும் ! சுடும் ! சுடும் ! வெறுப்புகள் சுடும் வேதனை செய்யும் விளக்கங்கள் சுடும் ! நீரும் சுடும் குளிரக் குளிர.. நெருப்பும் சுடும் எரிய.. எரிய..! அதையும் சுடும் அணைக்...

பாவேந்தரும் பொதுவுடைமையும் 3/4 – முனைவர் நா.இளங்கோ

Image
அகரமுதல 187 , வைகாசி 07 , 2048 / மே 21 , 2017 இலக்குவனார் திருவள்ளுவன்      21 மே 2017       கருத்திற்காக..   (பாவேந்தரும் பொதுவுடைமையும் 2/4 தொடர்ச்சி) பாவேந்தரும் பொதுவுடைமையும் 3/4 1940 தொடங்கிப் பாவேந்தர் தம்மை முழுமையான திராவிட இயக்கக் கவிஞராக, தமிழ்த் தேசியம் நாடும் கவிஞராக, தனித் தமிழ்நாடு அல்லது தனித் திராவிடநாடு கோரும் கவிஞராகத் தம்மை அடையாளப் படுத்திக்கொண்டார். ஆனாலும் தாம் சார்ந்த தன்மதிப்பு(சுயமரியாதை) இயக்கம் காண விரும்பும் குமுகாயமாக அவர் சமத்துவக் குமுகாயத்தைக் காட்டத் தவறியதே இல்லை. பாவேந்தர் பாடல்கள் வழி ஊற்றம் பெற்ற திராவிட இயக்கத்தினர் அனைவரும் பொதுவுடைமைச் சமூகமே, திராவிட இயக்கத்தின் குறிக்கோள் என்பதாக உணர்ந்தார்கள் . ஆனால் திராவிட இயக்கத் தலைவர்கள் அப்படிப்பட்ட திட்டம் எதனையும் முன்மொழியவேயில்லை. சாதி வேறுபாடுகளுக்குக் காரணமாயிருந்த ஆரிய புராணிக(பௌராணிக)க் கருத்துகளே வருக்க வேறுபாடுகளுக்கும் காரணம் என்ற தொனியிலேயே பாவேந்தர் வருக்கமுரண்பற்றிச் சிக்கல்களை வெளிப்படுத்தினார். ...