Posts

கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 13 & 14

Image
அகரமுதல 174, மாசி 07, 2048 / பிப்பிரவரி 19, 2017 இலக்குவனார் திருவள்ளுவன்      19 பிப்பிரவரி 2017       கருத்திற்காக.. (கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 11 & 12 தொடர்ச்சி)   திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 13 & 14 பதின்மூன்றாம் பாசுரம் புலவரின் முதற்சொல்லும் தமிழ்த்தாயின் பாடலும் வெண்டளைச் சொற்களையே வெண்பாவிற் பூட்டுதலான் கொண்டமுதற் சீரே புலவோர்க் குரிமையதாம்! பண்டு புனைந்தோர் படைத்தார் முதற்சொல்லே; வண்டமிழ்த்தாய் யாத்து வடித்தாள்காண் பாடலெலாம் ! தண்டை யணிந்து தளிர்க்கொடியாள் ஆடுகிறாள் ; வண்டிசை மேவ மயங்கிடவே பாடுகிறாள் ; கண்திறப்பாய், கோதாய்! கடைதிறப்பாய் ;சொல்,முதற்சொல்; கொண்டேத்தும் பாடலொன்று தாய்தருவாள் எம்பாவாய் ! பதினான்காம் பாசுரம் தமிழ் கேளாமல் உயிர்வாழாமை நன்றுஇது நன்றல்ல என்றே உணர்த்துமொளி மன்றில் இலாதெனினும் நெஞ்சம் கலங்காதே ! ஒன்றிடும் நல்லிசைதான் உள்ளம்  விழைவதுபோல் என்றும் ஒலியா திருந்தும் மனம்வருந்தா ! தின்னும் அறுசுவையில் ஒன்...

கவிஞாயிறு தாராபாரதி 15 & 16 – சந்தர் சுப்பிரமணியன்

Image
அகரமுதல 174, மாசி 07, 2048 / பிப்பிரவரி 19, 2017 இலக்குவனார் திருவள்ளுவன்      19 பிப்பிரவரி 2017       கருத்திற்காக.. (கவிஞாயிறு தாராபாரதி 13 & 14 தொடர்ச்சி) கவிஞாயிறு தாராபாரதி 15 & 16 பேரிருளில் தீச்சுடராய்ப் பொலிந்து நன்மை புரிகின்ற பிறப்பதுவே பெண்மை! உண்மை! ஈரமிலா இயல்பேற்ற இரும்புத் தன்மை, இதயத்தில் நல்லெண்ண மின்மை வன்மை! பாரதனில் மங்கையரின் பங்கு தம்மைப் பாடலினால் அவர்விரித்தார்! பன்மை மென்மை சேருமெனில் தோள்புடைக்கச் சேரும் திண்மை! செந்தமிழில் தெரிவித்தார் தெண்மை! நுண்மை! (15) வேருக்கு நீருழவன் விடுவ தாலே விளைவிங்கே வருகிறது! விழலே நாமும்! பாருக்குள் தெய்வதத்தைப் பாராப் போதும் பயிரெல்லாம் அவன்சிரிப்பைப் படைத்து நிற்பான்! ஏருக்கே அவன்கால்கள் என்ற போதும் இதயத்துள் உலவியவன் எண்ணில் நிற்பான்! ஊருக்கே உலைவாய்தான்! உழைப்பால் உண்டி உவந்தளிக்கும் எழுவாயே உழவன் தானே! (16) – சந்தர் சுப்பிரமணியன் கவிஞாயிறு தாராபாரதி கவிமலர் (தொடரும்)

திருக்குறள் அறுசொல் உரை : 118. கண் விதுப்பு அழிதல் : வெ. அரங்கராசன்

Image
அகரமுதல 174, மாசி 07, 2048 / பிப்பிரவரி 19, 2017 இலக்குவனார் திருவள்ளுவன்      19 பிப்பிரவரி 2017       கருத்திற்காக.. ( திருக்குறள் அறுசொல் உரை : 117. படர் மெலிந்து இரங்கல் தொடர்ச்சி)   திருக்குறள் அறுசொல் உரை  3. காமத்துப் பால்  15. கற்பு இயல்  கண் விதுப்பு அழிதல் காதலனைக் காணும் வேட்கையால் , காதலியின் கண்கள் துடித்தல். (01-10 தலைவி சொல்லியவை) கண்தாம் கலுழ்வ(து), எவன்கொலோ? தண்டாநோய்,       தாம்காட்ட யாம்கண் டது.         தீராத்துயர் ஆக்கிய கண்களே!         நீங்கள், அழுவது ஏனோ? தெரிந்(து)உணரா நோக்கிய உண்கண், பரிந்(து)உணராப்       பைதல் உழப்ப(து) எவன்?         விளைவை ஆராயாமல் கண்டகண்,         பிழைஉணராமல், துன்புறல் ஏன்? கதும்எனத் தாம்நோக்கித், தாம...