திருக்குறள் அறுசொல் உரை: 115. அலர் அறிவுறுத்தல் : வெ. அரங்கராசன்
அகரமுதல 171, தை 16, 2048 / சனவரி 29, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 29 சனவரி 2017 கருத்திற்காக.. (திருக்குறள் அறுசொல் உரை: 114. நாணுத் துறவு உரைத்தல் : தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை காமத்துப் பால் 14. களவு இயல் அலர் அறிவுறுத்தல் தலைமக்களின் காதலை, ஊரார் அறிந்து பலவாறு பழிதூற்றல் (01-05 தலைவன் சொல்லியவை ) அலர்எழ, ஆர்உயிர் நிற்கும், அதனைப் பலர்அறியார் பாக்கியத் தால். “பழிச்சொல்லால், உயிரும் நிற்கிறது; இதனை, ஊரார் அறியார்”. மலர்அன்ன கண்ணாள் அருமை அறியா(து), அலர்எமக்(கு) ஈந்த(து)இவ் ஊர். “குவளைமலர்க் கண்ணாள் அருமை அறியாது, பழிதூற்றுவார் ஊரார்”. உறாஅதோ ஊர்அறிந்த கெளவை? அதனைப் பெறாஅது, பெற்(று)அன்ன நீர்த்து. “ஊர்ப்பழி உண்மை ஆகாதோ? காதலைப் பெற்றால்போல் மகிழ்வேன்”. கவ்வையால், கவ்விது காமம்; அதுஇன்ற...