Posts

செந்தோழர் நல்லகண்ணு வாழ்க! – புதுவைத் தமிழ்நெஞ்சன்

Image
செந்தோழர் நல்லகண்ணு வாழ்க! – புதுவைத் தமிழ்நெஞ்சன் இலக்குவனார் திருவள்ளுவன்      27 திசம்பர் 2015       கருத்திற்காக.. தோழர் நல்லகண்ணு(மார்கழி 12, 1956 / திசம்பர் 26, 1925) செந்தோழர் நல்லகண்ணு நீடுவாழ்க! செங்கொடித் தோழர் நல்ல கண்ணு சிந்தனை ஆற்றல் உள்ளவராம் – அவர் செங்களம் ஆடிடச் சிறிதும் தயங்கார் செழுமை நெஞ்ச நல்லவராம். உழைக்கும் மக்கள் உள்ளம் எல்லாம் உணர்வில் கலந்த உழைப்பாளி – அவர் அழைத்தால் எதற்கும் அணிய மாவார் அவரே ஏழைப் பங்காளி. அரசியல் என்பதை ஆக்க முள்ள அறிவு வழிக்குச் சென்றவராம் – போர் முரசம் போல மூச்சும் பேச்சும் முயன்றே இங்கே அடிப்பவராம். நெடிய உருவம் நிமிர்ந்த பார்வை நேர்மை உள்ளம் கொண்டவராம் – தமிழ்க் குடியில் பிறந்து கொற்றம் ஆளும் தகுதி எல்லாம் பெற்றவராம். மக்கம் நலனே மனத்தில் என்றும் மதியோ டவரும் நினைத்திடுவார் – உழைக்கும் மக்கள் நெஞ்சின் துடிப்பாய் என்றும் துடிதுடித்தே வாழ்ந்திடுவார். நேர்மை வாய்மை தூய்மை ஏழ்மை அரசியல் வாழ்வில் கொண்டவராம் – ஆணி வேர்போல் வேர்வை க் குலத்தைக்...

கடவுளாய் நின்ற மழை! – தமிழ்சிவா

Image
இலக்குவனார் திருவள்ளுவன்      27 திசம்பர் 2015       கருத்திற்காக.. மழை உச்சந்தலையில் உட்கார்ந்து கிச்சுகிச்சு மூட்டும் ஒரு குழந்தை மழை! காலை நேரத்தில் ‘கோல’ப்பெண்களுடன் கொஞ்சி விளையாடும் ஒரு குறும்பு மழை! காயசண்டிகைக் கடலை நேயமுடன் நெருங்கி முத்தமிடும் ஒரு முத்து மழை! அரசியல் பிழைத்தோர்க்கு வாரக்கணக்கில் வகுப்பெடுக்கும் ஒரு புரட்சி மழை! ஆறுகளைக் கூறுபோட்ட அறிவிலார் மூளைக் கழிவுகளை அகற்றும் ஒரு துப்புரவு மழை! செம்புலப் பெயல்நீராய்த் தோன்றிச் சங்கப்புலவர்க்குக் காதல்சொன்னது ஓர் அந்தி மழை! முத்தொழில் செய்து கடவுளாய் நின்ற மழை! களவாடப்பட்ட எல்லாவற்றையும் மீட்டெடுக்க மீண்டும் மீண்டும் பெய்யெனப்பெய்து வென்ற மழை! புகுந்து புகார் சொன்னபோதும் கேளாமல் விட்டுவிட்டால் வெகுண்டு எழும் இனியும் ஒரு வெள்ள ம(லை)ழை!                            தமிழ் சிவா...

எங்கள் பெரியார் – கவிமதி

Image
இலக்குவனார் திருவள்ளுவன்      20 திசம்பர் 2015       கருத்திற்காக.. எங்கள் பெரியார் – மனு வேதம் கொளுத்திய திரியார் மூடிமறைத்துப் பேச அறியார் மூடப் பழக்கம் எதுவும் தெரியார் நூலார் திமிர் அறுத்த வாளார் நூற்றாண்டு கடந்து வாழும் வரலாறார் நரியார் தோலுரித்த புலியார் நால்வகை வருணம் கலைத்த கரியார் எளிதாய்க் கடந்து செல்லும் வழியார் ஏதிலியார்க்கு வெளிச்சம் தந்த விழியார் தெளியார் அறிவு நெய்த தறியார் தெளிந்தோருக்குத் தெளிவான குறியார் உலகத் தமிழருக்கு உரியார் உணர்ந்தால் விளங்கும் மொழியார் மனு வேதம் கொளுத்திய திரியார் மாதருக்குத் தெளிவான ஒலியார் தேடிப் படிக்க சிறந்த நெறியார் – தூய தாடி முளைத்த தந்தை பெரியார். கவிமதி அகரமுதல - மார்கழி 04, 2046 /  திசம்பர் 20, 2015