எழிலரசி அல்லது காதலின் வெற்றி 7 – பேரா.சி.இலக்குவனார்
இலக்குவனார் திருவள்ளுவன் 15 நவம்பர் 2015 கருத்திற்காக.. ( அகரமுதல 104 ஐப்பசி 22, 2046 / நவ. 08, 2015 தொடர்ச்சி ) எழிலரசி அல்லது காதலின் வெற்றி 7 மகிழ்ச்சி ததும்பும் மாநட் பினர்போல் வேடிக் கையுடன் வியப்புச் சொற்களும் கலந்துரை யாடியே காத்தவீ ரனுக்குப் பலியிடுங் கடாவைப் பொலிவுறச் செய்து இழுத்துச் செல்லு மேழை களிடை 6 துள்ளுங் கடாப்போல் தோற்றம் விளைத்து அடைந்தனர் முடிவில் யாருமில் காட்டை. அவருடை தங்கை யவனுடை மையலில் வீழ்க் காரணம் விளைத்த பிழைக்கு பழிகொள வெண்ணினர் விழிக ளழன்றன ஒருவரை யொருவ ருற்று நோக்கினர் கைகள் சென்று கைவாள் தொட்டன ஆடலனுடைய, கோட்டமில் தோற்றம், அவர்கள் கல்லுளம் அனலிடை யிட்ட மெழுகுபோ லாக்க, நழுவின கைகள்; மின்பொறி பட்டு மெலிவடைந் தவரென நடுங்கினர் வலிமை யொடுங்கி நின்றனர். முரணிய தோற்றம் முழுது முணர்ந்து அவர்கருத் தறியா தாடலன் தானும். ஏறு போனின் றிறும்பூ தெய்தினான். அவர்க ளுள்ளத் திலவனும் முன்னாள் எழிலர சிக்கோ ரின்ப முத்தம் தழுவி யளித்ததும்,...