Posts

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 030. வாய்மை

Image
இலக்குவனார் திருவள்ளுவன்      23 August 2015       No Comment (அதிகாரம் 029. கள்ளாமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 03. துறவற இயல் அதிகாரம் 030. வாய்மை     தீமை இல்லாதவற்றைச் சொல்லலும் , பொய்த்தல் இல்லாது வாழ்தலும் . வாய்மை எனப்படுவ(து) யா(து)?எனின், யா(து)ஒன்றும்,      தீமை இலாத சொலல்.          எச்சிறு அளவிலேனும், தீமை          இல்லாதன சொல்லலே வாய்மை . பொய்ம்மையும் வாய்மை இடத்த, புரைதீர்ந்த      நன்மை பயக்கும் எனின்.       யார்க்கும் குற்றம்இலா நன்மையான          பொய்யும், வாய்மையின் இடத்தது. தன்நெஞ்(சு) அறிவது, பொய்யற்க; பொய்த்தபின்,    தன்நெஞ்சே தன்னைச் சுடும்.          மனம்அறிந்து பொய்ப்பானை, அவனது  ...

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 029. கள்ளாமை

Image
இலக்குவனார் திருவள்ளுவன்      23 August 2015       No Comment (அதிகாரம் 028. கூடா ஒழுக்கம் தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 03. துறவற இயல் அதிகாரம் 029. கள்ளாமை உள்ளத்தாலும் , பிறரது பொருள்களை எள்அளவும் திருட எண்ணாமை . எள்ளாமை வேண்டுவான் என்பான், எனைத்(து)ஒன்றும்,      கள்ளாமை காக்க,தன் நெஞ்சு.   இகழ்ச்சியை விரும்பாதான், எந்த        ஒன்றையும் திருட எண்ணான். உள்ளத்தால் உள்ளலும் தீதே, “பிறன்பொருளைக்,    கள்ளத்தால் கள்வேம்” எனல்.        “ பிறரது பொருளைத் திருடுவோம்”        என்று, நினைப்பதும் திருட்டே .. களவினால் ஆகிய ஆக்கம், அள(வு)இறந்(து)    ஆவது போலக் கெடும்.   திருட்டுச் செல்வம், பெருகுதல்போல்        தோன்றினாலும், விரைவில் அழியும் . களவின்கண் கன்றிய காதல், விளைவின்கண்,  ...

"காங்கிரசா தமிழைக் காத்தது?” – பாரதிதாசன்

Image
இலக்குவனார் திருவள்ளுவன்      23 August 2015       No Comment ''காங்கிரசா தமிழைக் காத்தது?” செத்தவட மொழியினில் செந்தமிழ் பிறந்ததென்று பொய்த்திடும் வையாபுரிகள் போக்கினையும் ஆதரித்த கத்துநிறை காங்கிரசா எங்கள்தமிழை — இங்குக் காத்ததென்று புகன்றனை நாணமில்லையா? செம்பொனிகர் பைந்தமிழைத் தேர்ந்துணரா டீ.கே.சி.யைக் கம்பனென வேஅணைத்த கல்கியினை ஆதரித்த வம்புமிகும் காங்கிரசா எங்கள்தமிழை — இங்குக் காத்ததென வரைந்தனை வெட்கமில்லையா? தாய்மொழி இலக்கணத்தைத் தாக்கிஒரு கம்பனுயர் தூய்கவி அலைக்கழித்துச் சொற்பிழைக்கும் டிகேசியைப் போய்உயர்த்தும் காங்கிரசா எங்கள்தமிழை — இங்குக் காத்ததென்று புகன்றனை அறிவில்லையா? காளையர்கள் ஓதுதமிழ்க் கல்வியையும் பெற்றறியா மூளிகளைக், காப்பிக்கடை முண்டங்களை நல்லஎழுத் தாளரெனும் காங்கிரசா எங்கள்தமிழை — இங்குக் காத்ததென்று புகன்றனை உணர்வில்லையா? கூறுதமிழ் சொல்லாக்கக் குழுவினர் என்று சொல்லி மாறுபட்ட வடசொல்லில் மாற்றுவதை ஆதரிக்கும் வீறுதவிர் காங்கிரசா எங்கள்தமிழை — இங்...