Posts

செஞ்சீனா சென்றுவந்தேன் 18 – பொறி.க.அருணபாரதி

Image
செஞ்சீனா சென்றுவந்தேன் 18 – பொறி.க.அருணபாரதி இலக்குவனார் திருவள்ளுவன்      26 அக்தோபர் 2014       கருத்திற்காக..  18. சீனாவில் ‘பயங்கரவாதம்’ அன்றைய ஞாயிற்றுக் கிழமை, சியான் நகரின் முதன்மை வணிகப்பகுதியான மணிக்கோபுரத்தை(பெல் டவரை)ச் சுற்றி கடுமையான காவல்துறை பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. சீனப் படைத்துறையினரும் ஆங்காங்கு நின்று கொண்டிருந்தனர். சீன அரசுத் தலைவர்கள் யாரேனும் வந்திருப்பார்கள் போல என நினைத்தேன். பின்னர், அன்றிரவு வீடு திரும்பியதும் இணையத்தளத்தில் செய்தி பார்த்தேன். அன்றைய நாள் (மாசி 17, 2045 / மார்ச்சு1-2014) அன்று, சீனாவின் (உ)யுன்னன் (Yunnan) மாகாணத்தின், குன்மிங்கு (Kunming) நகரின் தொடர்வண்டி நிலையத்தில், கையில் கத்தியுடன் நுழைந்த ஒரு குழுவினர் கண்மூடித்தனமாகத் தாக்கியதில் 27 பேர் உயிரிழந்தனர். 109 பேர் காயமடைந்தனர். அக்குழுவினர் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. விசாரணையில் அக்குழுவினர், அல்கெய்தா அமைப்புடன் தொடர்புடைய கிழக்கு தர்கிசுதான் இசுலாமிய அமைப்பினர்(East Turkestan...

குடிசைத் தொழிலாகிப் போன தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்! – பகுதி-2 : நாக.இளங்கோவன்

Image
குடிசைத் தொழிலாகிப் போன தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்! – பகுதி-2 : நாக.இளங்கோவன் இலக்குவனார் திருவள்ளுவன்      26 அக்தோபர் 2014       கருத்திற்காக.. குடிசைத் தொழிலாகிப் போன தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்!  பகுதி- 2 : நாக.இளங்கோவன் ( ஐப்பசி 2, 2045 / அக். 09, 2014 தொடர்ச்சி ) வா.செ.குழந்தைசாமி இப்படிச் சொல்கிறார் என்றால், காலஞ்சென்ற முனைவர் கொடுமுடி சண்முகனார்ஒரு குறியீட்டை உகர ஊகார வரிசைகட்குச்சூட்டி விடுகிறார். இது வடமொழி அடியொற்றியது. மேற்கண்ட செய்யுளில் உள்ளது போல உகர ஊகாரஉயிர்மெய் எழுத்துகளை மாற்றி விட்டால்கணிக்கு ஏற்றதுபோலத் தமிழை மாற்றிவிடலாம்என்று பரிந்துரைக்கிறார் கொடுமுடியார். கணிக்குஎன்ன குறை அல்லது கணியில் தமிழுக்கு என்ன குறைஎன்பதை மட்டும் வசதியாக எல்லோரும் தவிர்த்துவிடுவது வியப்புக்களில் ஒன்று. உயிர்மெய் எழுத்துக்களில் 72 எழுத்துக்களைஇப்படி மாற்றிவிடலாம் என்று சிலர் கிளம்புகையில்இன்னுஞ் சிலர் உயிரெழுத்துகளைஎப்படியெல்லாம் மாற்றலாம் என்று சொல்கிறார்கள்என்று கவனிப்பது ...