Posts

சி. இலக்குவனாரின் தொல்காப்பிய ஆராய்ச்சி- முனைவர் ஆ.மணி

Image
புதன், 13 சூலை, 2011 சி. இலக்குவனாரின் தொல்காப்பிய ஆராய்ச்சி தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள அறிஞராகிய சி. இலக்குவனார் அவர்கள் தொல்காப்பியத்தை மக்களிடயே உலவச் செய்யும் நோக்கத்துடன் தொல்காப்பிய ஆராய்ச்சி என்ற நூலை 1961இல் எழுதி வெளியிட்டார். அதன் இரண்டாம் பதிப்பு 1971இல் புதுக்கோட்டை வள்ளுவர் பதிப்பக வெளியீடாக வந்தது. தொல்காப்பியம் த்ழர்களும் தமிழர்களைப்பற்றி அறிய விரும்புவோரும் தறாது கற்றறிய வேண்டிய தனிப்பெரும்நூலாகும் என்ற பதிப்புரைக் கருத்து மெய்மையே. இந்நூலின் மெய்ப்புத் திருத்தப் பணிகளில் பெரும்பேராசிரியர் தமிழண்ணலும் உதவியிருக்கின்றார் என்பது குறிக்கத்தகுந்த செய்தியாகும். தொல்காப்பிய ஆராய்ச்சி என்ற இந்நூல் 1. படையல், 2. பதிப்புரை, 3. முன்னுரை, 4. எழுத்து, 5. சொல், 6. பொருள், 7. குறிப்பு அகராதி ஆகிய ஏழு கூறுகளைக் கொண்டது. திருக்குறட் கழகத்தின் பொறுப்பாளர் கோவிந்தசாமி என்பாருக்கு இந்நூல் அன்புப் படையல் ஆக்கப்பட்டுள்ளது. முன்னுரை 22 பக்கங்களில் தொல்காப்பியரின் காலத்தை ஆராய்ந்து, அவர்காலம் கி.மு. 7ஆம் நூற்றாண்டு என முடிவுரைக்கின்றது. தொல்காப...

ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை!

Image
ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! By dn First Published : 14 April 2013 02:43 AM IST புகைப்படங்கள் கணவன் மேல் உண்மையான அன்பில்லாதவளாகஇருக்கிற மனைவி, கணவன் எக்கேடு கெட்டாலும் நமக்கென்னவென்று பேசாமலிருப்பாள். நன்மாதோ, எந்தத் துன்பத்தைப் பொறுத்தாலும் கணவனுடைய தீயொழுக்கத்தை மட்டும் ஒருநாளும் பொறுக்கமாட்டாள். கணவனுடைய தீயொழுக்கத்தை வெளியிலும் சொல்லாமல், அவனையுஞ் சினவாமல், அல்லும் பகலும் ஓயாத வருத்தமும், துக்கமும், பொறாமையுங் கொண்டு தகுந்த உணவு உறக்கமில்லாமல், மனம் புண்ணாகி மடிவாளென்பது உறுதியே! ஓவியக்காரர் சுவரில் எழுதும் ஓவியங்களை வந்து பார்க்கும்படி ஒரு கணவன் தன் மனவியை அழைக்க, "அவள் ஆண் ஓவியமாயிருந்தால் நான் பார்க்க மாட்டேன்; பெண் ஓவியமாயிருந்தால் நீர் பார்க்க உடன்பட மாட்டேனென்று' மறுமொழி சொன்னாள். ""ஓவியர்நீள் சுவரெழுதும் ஓவியத்தைக் கண்ணுறுவான் தேவியையா மழைத்திடஆண் சித்திரமேல் நான்பாரேன்; பாவையர்தம் முருவெனில்நீர் பார்க்கமனம் பொறேனென்றாள் காவிவிழி மங்கையிவள் கற்புவெற்பின் வற்புளதால்'' (நீ...

பேரிலக்கணம் கற்ற ஆசுகவி

Image
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி By ப.இராமலிங்கம் First Published : 14 April 2013 02:41 AM IST புகைப்படங்கள் கற்பனைக் களஞ்சியம்' எனப் போற்றப்படும் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், பேரிலக்கணங்களைக் கற்கப் பெரிதும் விரும்பினார். அதனைப் பெறத் தம் உடன் பிறப்புகளுடன் தென்னாடு நோக்கிப் பயணமாகி, திருநெல்வேலியை அடைந்தார். அங்கே தாமிரவருணி ஆற்றோரம் உள்ள சிந்துபூந்துறையில் அமைந்த, தருமபுர ஆதீனமடத்து வெள்ளியம்பலத் தம்பிரான் இலக்கண இலக்கியங்களில் மிக்க புலமை வாய்ந்தவர் என்பதைக் கேள்வியுற்றார். சுவாமிகளை அடுத்துத் தாம் இலக்கணம் கற்க வேண்டி வந்தமையைத் தெரிவித்துக் கொண்டார். தம்பிரான் சுவாமிகள், சிவப்பிரகாசருடைய இலக்கியப் பயிற்சியை அறிதல் பொருட்டு, "கு' என்பதை முதலெழுத்தாகக் கொண்டும், "ஊருடையான்' என்னும் சொல் இடையில் வருமாறும், மீண்டும் "கு' என்பதை இறுதி எழுத்தாகக் கொண்டு முடியுமாறும் ஒரு வெண்பா பாடுக'' என்றார். உடனே சிவப்பிரகாசர், ""குடக்கோடு வானெயிறு கொண்டாற்குக் கேழல் முடக்கோடு முன்னமணி வ...

இடைநின்று மீள்வரோ..?

Image
இடைநின்று மீள்வரோ..? By இரா.வெ.அரங்கநாதன் First Published : 14 April 2013 02:40 AM IST புகைப்படங்கள் பொருள் என்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் எண்ணிய தேயத்தும்' என்றும், "செறுநர் செருக்கு அறுக்கும் எஃகு' அஃதெனச் செப்பிய வள்ளுவனின் வாய்மொழியை மறந்ததாகத் தெரியவில்லை மறத்தமிழர். "வினையே ஆடவர்க்கு உயிரே' என்றே விளங்கியிருந்தது அவர்தம் உள்ளம். ""அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கிலை'' எனும் அன்றைய தமிழனோ காதலே வாழ்வெனக் காவியக் கருத்துளே திளைத்தாலும், பொருள் தேடிச் சென்றாலும் போர்க்களம் சென்றாலும் திசைமாறிச் செல்லாமல் இருந்திருக்கிறான் என்பதே திண்ணம். கருமமே கண்ணாகவும் இருந்திருக்கிறான் அன்றைய தமிழன் - தலைவன். அன்பொடு மரீஇய அகனைந்திணையை நுதலிய பொருளாகக்கொண்ட குறுந்தொகைப் பாடல் ஒன்றில் தலைவிக்கும் தோழிக்குமிடையே ஒரு தவிப்புரை. விலங்குகள் ஒன்றோடொன்று தமக்குள் அன்பைப் பரிமாறிக்கொண்டாலும் அதைக் கண்ணுறும் தலைவனுக்கு என் நினைவு வந்து, தான், சென்ற பணியை மறந்து என்னைத் தேடிவந்துவிடுவாரோ என்று அஞ்ச...

நீ... எந்தச் சாதி?

Image
நீ... எந்தச் சாதி? By ந.லெட்சுமி First Published : 07 April 2013 12:38 AM IST புகைப்படங்கள் கவிமணி எழுதிய கவிதைகளுள் "நிந்தாஸ்துதி'யும் ஒன்று. பாட்டுடைத் தலைவனைக் குறைகூறுவது போல் பாராட்டும் பண்பே "நிந்தாஸ்துதி' எனப்படும். தமிழ்க் கடவுளாம் முருகப்பெருமானை,   " "தந்தை மலையாளி, தாய்மாமன் மாட்டிடையன்     வந்த ஒரு மச்சானும் வாணியனே -  சந்தமும்    விண் முகத்தை எட்டும் அயில் வேலேந்து    பன்னிருகைச் சண்முகத்திற்கு சாதி யெதுதான்?'' என்கிறார். அதாவது, முருகனின் தந்தை சிவன் கயிலை மலையில் வசிப்பதால் அவர் மலையாளி. தாய் மாமன் விஷ்ணு மாடு மேய்த்த கண்ணன் ஆகையால் அவர் மாட்டிடையன். திருமாலின் மகன் பிரம்மன் ஆகையால் அவர் "மச்சான்' ஆகிறார். அவர் கலைவாணியின் கணவர் ஆதலால் வாணியன். ஆகவே, முருகா! உன்னை எந்தச் சாதியில் சேர்ப்பது? என்று கவிமணி நகைச்சுவை உணர்வுடன் வியந்து கேட்கிறார்.

பகுதி தகுதி விகுதி

Image
பகுதி  தகுதி  விகுதி By புலவர் வாகைப் புரவலன் First Published : 07 April 2013 12:31 AM IST புகைப்படங்கள் எதையுமே நேரடியாகச் சொல்லிவிட்டால் அதில் ஒரு சுவை இருக்காது. அதையே ஒரு புதிராகச் சொல்லும்போது சற்றே சிந்திக்கவும், சிந்தித்து விடையைக் கண்டுபிடிக்கும் போது மகிழ்ச்சியோடு அதை நினைவில் கொள்ளவும் முடிகிறது. இராமலிங்க அடிகள், தனியொரு மனிதராய் தமிழுக்கும் ஆன்மிகத்துக்கும் செய்த தொண்டு அளப்பரியது. அவர் அறுகம்புல் பற்றி எழுதியுள்ள ஒரு வெண்பா படித்து, சிந்திக்க இன்பம் தருகிறது. ""பகுதி தகுதி விகுதி எனும் பாட்டில் இகலில் இடையை இரட்டி - தகவின் அருச்சித்தால் முன்னாம்; அதுகடையாம்        கண்டீர் திருச்சிற் சபையானைத் தேர்ந்து'' பகுதி தகுதி விகுதி என்னும் சொற்களில் நடுவில் வரும் எழுத்தைக் கூட்டி இரட்டிப்பாக்கினால் வருவதைக் கொண்டு சிற்சபையானை (இறைவனை) அருச்சனை செய்தால், முதலில் வரும் எழுத்துகளைக் கூட்டியது உண்டாகி, கடைசி எழுத்துகளைக் கூட்டினால் வருவது கிடைக்கும். சிற்சபையானை எதைக்கொண்டு அ...

மகாவித்துவானின் மனம் வருடிய பாடல்

Image
மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் By புலவர் ப.சோமசுந்தர வேலாயுதம் First Published : 31 March 2013 01:25 AM IST   மகாவித்துவான்' மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் பாடம் கேட்க, திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஓர் ஊரிலிருந்து "ஆரியங்காவல்' எனும் மாணவர் வந்தார். வந்திருக்கும் மாணவர் தகுதியறிந்து பாடம் கற்பிக்கும் இயல்பினராதலால், ஒரு செய்யுள் சொல்லுமாறு மகாவித்துவான் மாணவரிடம் வினவினார். "நீர்நாடு நீங்கியுமே நீங்காது தனைத்தொடரும்' எனும் தொடக்கத்தையுடைய பாடலை மாணவர் சொல்ல, அதைக் கேட்கும்போதே ஆசிரியரின் செவியும் உள்ளமும் குளிர்ந்தது. "இச்செய்யுள் எந்த நூலில் உள்ளது?' என அவர் வினவ, "திரிகூடராசப்பக் கவிராயர் எழுதிய குற்றாலத் தலபுராணத்தில் உள்ளது' என ஆரியங்காவல் கூறினார். பிறகு, ஆசிரியருக்கு அந்நூலையும் வரவழைத்துக் கொடுத்தார். ஆரியங்காவலுக்கு இயல்பாகச் செய்யுள் இயற்றும் ஆற்றலும் இருந்தது. வெளியூரிலிருந்து வந்திருப்பவர் என்பதாலும், தமிழில் நல்ல பயிற்சியுடையவராக இருப்பதாலும் ஆசிரியருக்கு இவர்பால் மிக்க அன்பு உண்டாயிற்று. ஒரு...