Posts

Iniyavanukku 70; ilakkiya veedthikku 34

Image
கவின் இல்லம் இலக்கிய வீதிக்கு 34 தமிழ்முனி இனியவனுக்கு 70 Apr 21, 2012 by தமிழ்வேல் in விருந்தினர் அறை 0 comments 50 ஆண்டுகளுக்குமேலாக எழுத்தாளராகப் பணி, 33 ஆண்டுகள் இடையறாத அமைப்புப் பணி எனத் தொடர்ந்து தமிழ்ப்பணியாற்றிவரும் ‘இலக்கிய வீதி’ அமைப்பாளர் இனியவனின் 70ம் ஆண்டு விழா கடந்த 16ஆம் தேதி கோலாகலமாக சென்னையில் நடைபெற்றது. விழாவில் தமிழகம் மற்றும் பிற இடங்களிலிருந்து முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள். அதை முன்னிட்டு அவரிடம் ஒரு நேர்காணல்... இனியவன் பெயரில் மட்டுமல்ல, நேரிலும் இனியவராகவே இருக்கிறார். இனியவன் ஒரு சிறந்த எழுத்தாளர், கவிஞர் மட்டுமல்ல, பல அமைப்புகளின் பொறுப்புகளில் இருந்து இன்றுவரை செயல்பட்டுவருபவர். அதோடு தமிழின் தற்கால இலக்கியத்துக்கு வளம் சேர்க்க பல எழுத்தாளர்களை அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. • இளமைக்காலம் பற்றிச் சொல்லுங்கள்.. “9ஆம் வகுப்பு படிக்கும்போதே ‘மாணவர் குரல்’ என்ற இதழில் முதல் சிறுகதையை எழுதினேன். அது பரிசும் பெற்றது. அந்த ஊக்க...

To forget good turns is not good: நன்றி மறப்பது நன்றன்று

Image
                      நன்றி மறப்பது நன்றன்று எங்களைப் படைத்தவன் நாட்டம் - ஓர்       இணையிலா நன்றியின் தேட்டம் ; இங்கொரு நன்மையும் எட்டும் - வரும்       எழில்மிகு மறுமையும் கிட்டும் !                              வாய்ப்புகள்   வழங்கியோன் இறைவன் - இந்த       வாயால் மறுத்தலும் முறையோ? , தேய்ந்திடும் பூமியில் வாழ்வு - நீயும்         தொழுதலும் நன்றியின் பதிவு அமுதினை   வழங்கிடும் இறையை -   அவனும்      அருளியத் தேன்மொழி மறையை நமதெனப் போற்றிடும் மனமும் - இனி      நன்றியைக் நவின்றிடு தினமும் காலமும் கரைவதைக் காண்பாய் - நம்      காசுகள் குறைவதைக...
Image
சீனத்து இலக்கியப் பட்டு பா. கிருஷ்ணன் First Published : 01 Mar 2012 09:37:39 AM IST ஸ்ரீதரன்மதுசூதனன் சீன மொழியின் மிகப் பழைய பாடல் தொகுப்பை அந்த மொழியிலிருந்து நேரடியாகத் தமிழுக்கு, அதன் மண் வாசனையும், தொன்மையும் குலையாமல் மொழியாக்கியுள்ளார் இந்திய வெளியுறவு அதிகாரி ஸ்ரீதரன். "வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை' என்பது நூலின் தலைப்பு. பிற மொழிபெயர்ப்பைப் போல் அல்லாமல், இந்நூலைத் தமிழில் கொண்டுவருவதற்கு ஓர் இலக்கியப் பயணமே மேற்கொண்டிருக்கிறார் ஸ்ரீதரன். "பயணி' என்ற புனை பெயரில் இந்நூலை தமிழுக்குத் தந்திருக்கிறார். பிறமொழியிலிருந்து தமிழுக்குக் கொண்டுவரும் "கலைச் செல்வங்கள் யாவும்' பெரும்பாலும் நேரடியாக வராமல் ஆங்கில மொழியின் மூலமாகவே வருகின்றன. முதல் முறையாக சீனமொழியிலிருந்து, அதுவும் சங்க இலக்கியம் போன்ற பண்டைய நூல் ஒன்று நேரடியாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது இதுவே முதல்...

Bharathidasan poem about Bharathy : பாரதியார் நாமம் வாழ்க!

Image
பாரதியார் நாமம் வாழ்க! வாளேந்து மன்னர்களும் மானியங்கொள்   புலவர்களும் மகிழ்வாய் அந்நாள் தாளேந்திக்காத்த நறுந் தமிழ் மொழியைத்   தாய்மொழியை உயிரை இந்த நாள் ஏந்திக் காக்குநர் யார்? நண்ணுநர் யார்?   என அயலார் நகைக்கும் போதில் தோளேந்திக் காத்த எழிற் சுப்ரமணிய   பாரதியார் நாமம் வாழ்க! ...

Ilakkuvanarin pataippumanikal 98: Tamilnadu is the birth place of humanbeing: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 98 உலகில் முதல் மாந்தர் தோன்றிய இடம் தமிழகமே

இலக்குவனாரின் படைப்பு மணிகள்  98 உலகில் முதல் மாந்தர் தோன்றிய இடம் தமிழகமே பதிவு செய்த நாள் : 29/11/2011  உலகில் முதல் மாந்தர் தோன்றிய இடம் தமிழகமே என்பதும், முதல் மாந்தரால் உரையாடப்பெற்ற மொழி தமிழே என்பதும் உண்மையோடுபட்ட செய்திகளே யாயினும் இன்னும் யாவராலும் ஒப்புக்கொள்ளப்படவில்லை. தமிழர்கள் இந்நாட்டில் தோன்றியவரே என்பதும் ஆரியர் வருகைக்கு முன்னர் இந்நாட்டில் வாழ்ந்த மக்கள் தமிழர்களே என்பதும் நிலைநாட்டப்பெற்றுவிட்டன. (பழந்தமிழ் பக்கம் 42) 0 முந்தைய பதிவு » தமிழ்த்தாத்தா பேராசான் உ.வே.சா ~ அறிவோம் அறிஞர்களை! http://www.natpu.in/?p=18498

Ilakkuvanarin pataippumanikal 97: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 97. “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்பது வெற்றுரையன்று

இலக்குவனாரின் படைப்பு மணிகள்  97. “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்பது வெற்றுரையன்று . இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 25/11/2011  உலக மொழிகளை எல்லாம் கற்று ஆராய வல்ல வாய்ப்பு ஏற்படுமேல் தமிழ் ஒன்றே உலக முதன் மொழியாம் பெருமைக்கும் தகுதிக்கும் உரியது என்று நிலைநாட்ட இயலும். “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்பது வெற்றுரையன்று. ஓரிடத்தில் தோன்றிய மாந்தர் பல்வேறு இடங்கட்கும் பிரிந்து சென்று பல வகையாலும் வேறுபட்டு விளங்குகின்றனர். மாந்தர் முதலில் தோன்றிய இடம் தென்னகமே என்று மாந்தர் நூல், வரலாற்று நூல், நில நூல் ஆராய்ச்சியாளர்கள் கூறத் தொடங்கியுள்ளனர். இக் கூற்று வலுப்பெற்று நிலை நாட்டப்படுமேல், தமிழே உலக மொழிகளின் தாய் என்று யாவராலும் ஒப்புக் கொள்ளப்படும். தமிழே சிதைந்து ஒன்று பலவாய் வேறுபட்டனவாய் இன்று காணப்பட்டாலும் தமிழின் இயல்புகள் ஆங்காங்குள்ள மொழிகளில் வெளிப்படுகின்றன. யானை கண்ட குருடர்கள் போன்று இன்று மொழி நூலறிஞர்கள் தமிழையும் அதன் கிளை மொழிகளையும் பல்வேறு குடும்பங்கட்கு உரிமையாக்கி உரைத்து மகிழ்...

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 96. நாகரிக மக்கள் கற்க வேண்டிய மொழி

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 96. நாகரிக மக்கள் கற்க வேண்டிய மொழி இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 24/11/2011  நாகரிக மக்கள் கற்க வேண்டிய மொழிகளுள் ஒன்று தமிழ் என்பதை யாரும் மறத்தல் இயலாது. உலக அரங்கில் இடம் பெறுவதற்கு முன்னர் அதன் பிறப்பிடமாம் இந்நாட்டில் அதற்குரிய இடத்தை அளித்தல் வேண்டும். பாரத கூட்டரசுச் செயல்முறை மொழிகளுள் ஒன்றாகத் தமிழை ஏற்கச் செய்தல் வேண்டும். பாரத மொழிகளின் தாயே தமிழ்தான். தாயைப் புறக்கணித்து, மகளைப் போற்றும் மதியிழந்த மாந்தரைப்போல் இன்று தமிழைப் புறக்கணித்து இந்தியை அரியணையில் ஏற்ற முயல்கின்றனர். பழந்தமிழுடன் ஆரியம் வந்து கலந்ததனால் உண்டான விளைவே பாரத மொழிகளின் தோற்றம். ஆனால் பாரத மொழிகளின் தாய் ஆரியமே; தமிழும் அதன் புதல்விகளுள் ஒன்றே என்று கருதிவிட்டனர். வடவாரியம், இந்தோ ஐரோப்பிய குடும்பத்தைச் சேர்ந்தது. பழந்தமிழோ தனிக்குடும்பத்தைச் சார்ந்தது. மொழிக்குடும்பங்களை ஆராயின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனி இயல்புகள் உள என்பதை அறியலாகும். (பழந்தமிழ்  பக்கம் 35) 0 ...