Skip to main content

தமிழ் – ச.சுதாகர்



தமிழ்

தமிழின்  சிறப்பு  தனை  யறிந்திட
அமிலம் போல் ஆசை நெஞ்சரிக்க,
தொடங்கினேன் கற்க தொல் காப்பியம்.
குடம்தேன் எறும்பு குடிக்க முயல்வதுபோல்
எண்ணினேன், ஓர் எண்ணம் கொண்டேன்;
என் உயிர் உள்ள வரை,
உணவு போல் உயிர்மொழித் தமிழை
மனம்தினம்  சுவைக்கும் வண்ணம் செய்யவே!
ச.சுதாகர்

Comments