திருக்குறள் அறுசொல் உரை – 101. நன்றி இல் செல்வம் : வெ. அரங்கராசன்
திருக்குறள் அறுசொல் உரை
- பொருள் பால்
- குடி இயல்
அதிகாரம் 101. நன்றி இல் செல்வம்
பெற்றவர்க்கும், மற்றவர்க்கும் நன்மையால்
உற்றதுணை ஆகாத பெரும்செல்வம்
- வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள், அஃ(து)உண்ணான்,
இடம்நிறைத்த பெரும்பொருளை உண்ணான்,
எப்பயன் இல்லான்; செத்தான்தான்.
- “பொருளான்ஆம் எல்லாம்”என்(று), ஈயா(து), இவறும்,
“செல்வத்தால் எல்லாம் ஆகும்”என,
மயங்கும் கருமி, சிறப்புறான்.
- ஈட்டம் இவறி, இசைவேண்டா ஆடவர்
பெரும்செல்வம் குவித்தும், கொடைப்புகழ்
பெறாதான், பூமிக்குச் சுமைதான்.
- எச்சம்என்(று), என்எண்ணும் கொல்லோ….? ஒருவரால்
& கருமி, தனக்குப்பின், அடையாளமாக
எதனை விட்டுச் செல்வானோ…..?
- கொடுப்பதூஉம், துய்ப்பதூஉம் இல்லார்க்(கு), அடுக்கிய
கோடி கோடியாக இருந்தாலும்,
கொடாதான் நுகராதான், ஏழைதான்.
- ஏதம் பெரும்செல்வம், தான்துவ்வான், தக்கார்க்(கு)ஒன்(று)
நுகராதான், கொடாதான் பெரும்செல்வம்,
அவனுக்கும் துன்பமே தரும்.
- அற்றார்க்(கு)ஒன்(று) ஆற்றாதான் செல்வம், மிகநலம்
மணம்ஆகா அழகியின் மூப்பும்,
கருமியின் செல்வமும் வீண்ஆம்.
- நச்சப் படாதவன் செல்வம், நடுஊருள்
கருமியின் விரும்பப்படாச் செல்வம்,
நடுஊரில் பழுத்த நஞ்சுமரம்.
- அன்(பு)ஒரீஇத், தன்செற்(று), அறம்நோக்கா(து), ஈட்டிய
அன்பு,அறம் மறந்து, வருத்திப்
பெற்றபொருளை மற்றவர் கொள்வார்.
- சீர்உடைச் செல்வர் சிறுதுனி, மாரி
கொடைச்செல்வர் பெற்ற வறுமை,
மழைமுகிலின் வறட்சிக்குச் சமம்.
பேரா.வெ.அரங்கராசன்
Comments
Post a Comment