Posts

Showing posts from December, 2025

கஎ. ஈழத்தைப் பாரடா! ஏமாளித்தமிழா!-திருத்துறைக் கிழார்

Image
ஃஃஃ  இலக்குவனார் திருவள்ளுவன்         25 December 2025         அ னரமுதல (க௬. தமிழர் செய்ய வேண்டுவன?- தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் கஎ. ஈழத்தைப் பாரடா! ஏமாளித்தமிழா! இலங்கையின் மக்கள் தொகை நூற்று எழுபது இலக்கம். அதில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை இருபது இலக்கம். சிங்களர் அரசு 1980 – ஆம் ஆண்டு தமிழின அழிப்புப் பணியில் இறங்கி, பல்லாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்தது. ஆண், பெண், சிறார் என்ற வேறுபாடு கருதாது நூழிலாட்டு நடத்தியது. ஈழத்தில் தங்கட்கு விடுதலை வேண்டிப் போராடிய தமிழர் நான்கு பிரிவினராவர். அவர்களுள் விடுதலைப்புலிகள் தீவிரமாகச் செயல்பட்டனர். இக்குழுவினர்க்குத் தலைவர் மறவர்  வேலுப்பிள்ளை பிரபாகரன்  என்பவர். தன்மானமுள்ள தமிழ் இளைஞர், ஆண், பெண் இருபாலரையும் திரட்டி  விடுதலைப் புலிகள்  படை உருவாக்கி,  தமிழ் ஈழம்  தனியாட்சி பெறப் போராடத் தொடங்கினார். தமிழ்மக்கள் பல்லாயிரவர் சிறீலங்காப் படைகளால் கொல்லப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்டனர். எனினும் தளராத...

க௬. தமிழர் செய்ய வேண்டுவன?-திருத்துறைக் கிழார்

Image
ஃஃஃ   இலக்குவனார் திருவள்ளுவன்         18 December 2025         அ கரமுதல (கரு.  தடைச்சட்டமும் தமிழ் இனமும் 3/3: தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் க௬. தமிழர் செய்ய வேண்டுவன? க. விலைகள் உயர்வை எதிர்த்து மறியல் செய்தல். உ. மதுக்கடைகளை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தல் ௩. உப்பு காய்ச்சுதல், உப்பு அள்ளுதல் போராட்டம் நடத்தல். ௪. வரிகொடாப் போராட்டம் நடத்தல். ரு. காவிரிநீர் கொடாமலும், திருவள்ளுவர் படிமம் நாட்ட இசைவு கொடாமலும், கருநாடகத் தமிழர் பலரைக் காவு கொடுத்த கருநாடக அரசுடன் தமிழக அரசு எவ்வகை உறவும் வைத்துக் கொள்ளக் கூடாதென்று தமிழக அரசை வற்புறுத்தல். ௬. தமிழ்நாட்டில் வாழும் அயலாரையெல்லாம் வெளியேற்றுமாறும், இனி எவரையும் தமிழ்நாட்டில் குடியமர விடக் கூடாதென்றும் தமிழக அரசை வலியுறுத்திப் போராடல். எ. தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களை மேல்குடியினர் வாழுமிடங்களிலும், கோவில்களின் சுற்றுச் சுவர்களிடையிலும் குடியமர்த்துமாறு புரட்சி செய்தல். அ. கோவில்களில் முடக்கப்பட்டுள்ள செல்வங்களை (பொன், ...

கரு. தடைச்சட்டமும் தமிழ் இனமும் 3/3: திருத்துறைக் கிழார்

Image
  ஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன்         11 December 2025         அ கரமுதல ( கரு.  தடைச்சட்டமும் தமிழ் இனமும் 2/3: தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் கரு.  தடைச்சட்டமும் தமிழ் இனமும்  3/3 ஆயின், ஆப்பிரிக்காவில் வாழும் ‘இந்தி’யர், அமெரிக்கா, இங்கிலாந்து முதலான அயல்நாடுகளில் உறையும் இந்தியர் (வடநாட்டார்)க்கு ஓர் இடர் என்றால் இந்திய அரசு எதிர்ப்புக்குரல்  எழுப்புவதும் குற்றமன்றோ? இராசீவு காந்தி யின் இறப்பைச் சாக்காக வைத்து  தமிழ்மக்களின் விடுதலை உணர்வையும், உயிரையும், பொருட்படுத்தாமல் மானங்காக்க, உரிமைபெறப் போராடும் ஈழத்தமிழரின் வீர உணர்வையும் மழுங்கடிக்க இந்திய அரசும், தமிழக அரசும் பாடுபடுவது நன்றன்று. இதனை முன்வைத்து இலங்கை அரசும் இதுதான் நல்வாய்ப்பென்று ஈழத்தமிழர்க்கு எதிர்ப்பாகக் குரல் கொடுப்பதுடன்  விடுதலைப்புலி களை இழிவுபடுத்தியும், ஏளனமாகவும் பேசி ஒலிபரப்புகிறது. தமிழகத் தமிழர்க்கு விடுதலை பெற விடுதலைப்புலிகள் உதவக்கூடும்...

கரு. தடைச்சட்டமும் தமிழ் இனமும் 2/3: திருத்துறைக் கிழார்

Image
ஃஃஃ    இலக்குவனார் திருவள்ளுவன்         04 December 2025         அ கரமுதல ( கரு.  தடைச்சட்டமும் தமிழ் இனமும் 1/3: தொடர்ச்சி ) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் கரு.  தடைச்சட்டமும் தமிழ் இனமும்  2/3 இலங்கை அரசுடன் இந்தியா உடன்படிக்கை இந்திராகாந்தி  இந்தியாவை ஆண்டகாலத்தில் தமிழ்நாட்டிற்குரிய  கச்சத்தீவு  இலங்கையரசிடம் விடப்பட்டது. தமழக அரசு வடவரக்கு அடிமையாயிருப்பதால் தட்டிக்கேட்கத் துணிவில்லை. கேட்டால் பதவி பறிபோகும்!  ஈழ விடுதலைப்புலிகள் போராட முற்பட்டனர். ஈழத்தமிழர் இளைஞர் பலர் படையில் சேர்ந்தனர். சிங்களர் அரசுடன் போர் தொடங்கினர். சிங்களர் திணறினர். இலங்கையரசால் தாக்குப் பிடிக்கவியலவில்லை.  அமெரிக்கப் படைகள்  தங்க இலங்கையில் இடமளிக்க முடிவு செய்தது இலங்கையரசு. இந்த முடிவு இந்திய அரசுக்குப் பெருந்தலைவலியாகிவிடும் என்ற அச்சத்தால்  இராசீவு காந்தி  தலைமையிலான இந்திய அரசு இலங்கை அரசின் தலைவர்  செயவர்த்தனா வுடன் ஓர் உடன்படிக்கை ...