Posts

Showing posts from January, 2025

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 84 : சண்டிலி வருகை

Image
    கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 84 : சண்டிலி வருகை ஃஃஃ    இலக்குவனார் திருவள்ளுவன்         30 January 2025         அ கரமுதல ( கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 83 : 18. இசைப்பணி புரிந்த காதை-தொடர்ச்சி) பூங்கொடி            இசைப்பணி புரிந்த காதை சண்டிலி வருகை           மணக்கும் தென்றல் மாமலை எழிலும், கோடை தவிர்க்கும் குளிர்மலைப் பொழிலும், நீடுயர் தண்ண்ணிய நீல மலையுடன் கண்டுளங் குளிர்ந்த காரிகை ஒருத்தி             சண்டிலி என்பாள் சார்ந்து வணங்கித்    55           `தமிழிசை வளர்க்கும் தையாஅல் நின்னுழை அமிழ்தம் நிகர்க்கும் அவ்விசை பயிலும் ஆர்வங் கொண்டுளேன் ஆதலின் அருள்நலங் கூர்விழி யாய்நின் குழுவினுள் எனையும்                 ...

அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 74-76

Image
  அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 74-76 இலக்குவனார் திருவள்ளுவன்         28 January 2025         No Comment ( அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 71-73-தொடர்ச்சி) 74. மரக்கவிப் புலவர் சென்ற நூற்றாண்டிலே மரக்கவிப்புலவர் என்று ஒருவர் வாழ்ந்தார். அவர் எதனைப் பாடினாலும்  மரத்தை வைத்துப் பாடுவது வழக்கம் . – – ஒருமுறை, மன்னர் ஒருவரைப் பார்த்துப் பாடிப் பரிசில் பெற எண்ணிச் சென்றார். அப்போது மன்னர் அங்கு இல்லை. வேட்டைக்குப் போயிருந்தார். மன்னர் திரும்பி வரும்வரை காத்திருந்த புலவர், அவர் வந்த பின்பு தாம் இயற்றிய கவிதையைப் பாடினார். ‘மரமது மரத்திலேறி மரமதைத் தோளில்வைத்து மரமது மரத்தைக் கண்டு மரத்தினால் மரத்தைக்குத்தி மரமது வழியே மீண்டு வன்மனைக் கேகும்போது மரமதைக் கண்ட மாதர் மரமொடுமரம் எடுத்தார் . அரசனும் கேட்டு மகிழ்ந்தான். பொருள் தெரியாமல் புலவர்கள் விழித்தனர். அரசனோ பெரும்பொருள் பரிசாக அளித்து, மரக்கவிப் புலவரை மரியாதை செய்து அனுப்பிவைத்தான் பொருள் தெரியாமல் விழித்து, பொறாமையால் வெதும்பி நின்ற மற்றப் புலவர்கள...

எ. தமிழும் – வடமொழியும்-புலவர் வி.பொ.பழனிவேலனார்

Image
  எ. தமிழும் – வடமொழியும்-புலவர் வி.பொ.பழனிவேலனார் ஃஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன்         25 January 2025         அ கரமுதல ( ௬. கலைச்சொற்களின் தேவை-புலவர் வி.பொ.பழனிவேலனார்-தொடர்ச்சி ) திருத்துறைக்கிழார்   கட்டுரைகள்      எ. தமிழும் – வடமொழியும் தமிழும் வடமொழியும் (சமற்கிருதம்) இறைவனது இரு கண்கள் என்பர் சிவனடியார் ;  வடமொழியினின்றுதான் தமிழ் தோன்றிற்றென்பர் வடமொழிவாணர். தமிழில் வடமொழிச் சொற்கள் கலந்ததால்தாம் தமிழ் வளம் பெற்றதென்பர் தமிழ்ப்பகைவர். சிவன் ஆரிய அகத்தியனுக்குத் தமிழ் இலக்கணத்தைக் கற்பித்து ,  தென்னாட்டில் தமிழைப் பரப்பச் செய்தான் என்பது ஆரியர் கூற்று. மேற்கூறியவை மொழி நூலாராய்ச்சியும், தமிழின் இயல்பறிவும் இல்லாதார் கழற்றுரைகளாகும். தமிழ், திரவிடத்திற்குத் தாயும், ஆரியத்திற்கு மூலமுமாகும் என்பது மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப்பாவாணர் கண்ட முடிபு. தமிழ் ,  உயர்தனிச்செம்மொழி ;  பிறமொழி கலவாமல் இயங்கவல்ல சிறந்த மொழி ;  உலக மொழிகளுக்கெல்லாம் முன் பிறந...

ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 15 : பாலத்தீனத்துடனான வாணிகம் – புலவர் கா.கோவிந்தன்

Image
  ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 15 : பாலத்தீனத்துடனான வாணிகம் – புலவர் கா.கோவிந்தன் ஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன்         24 January 2025         அ கரமுதல ( ஆரியர்க்கு முற்பட்ட வெளிநாட்டு வாணிகம் 2 – புலவர் கா.கோவிந்தன் – தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட வெளிநாட்டு வாணிகம் 3 பாலத்தீனத்துடனான வாணிகம் கி.மு. இரண்டாம் ஆயிரத்தாண்டு முடிவதற்குச் சிறிது முன்னர்,  எபிரேயர்கள் , எகிப்தில் அடிமைத் தளையிலிருந்து விடுபட்டுப் பாலத்தீனத்திற்குக் குடிபெயர்ந்துவிட்டனர். அவர்களோடு சென்ற இனிய மணப்பொருள்கள், புனிதத் தன்மை வாய்ந்தனவாக மதிக்கப்பட்டன. இசுரேல் அரசின் தோற்றத்தில் வளம் கொழிக்கும் வாணிகம் முக்கியத்துவம் வாயந்ததாகிவிட்டது. ஆகவே அரேபிய வாணிகர்களால் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட் ட இலவங்கம், எபிரேய மத குருக்களின் புனித திருநெய்யாட்டு எண்ணெய் யின் சலவைப் பொருள்களுள் ஒன்றாகிவிட்டது என்பதை அறிகிறோம். (Exod.xx)  நீலமணிக்கல்லும் இந்தியாவிலிருந்தே கொள்முதல் செய்யப்பட்டது  என்பது ஏற்கனவே குறிப்ப...

அறிவுக்கதைகள்நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 62-64

  அறிவுக்கதைகள்நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 62-64 ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         31 December 2024         அகரமுதல (அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 59-61-தொடர்ச்சி ) அறிவுக்கதைகள்    நூறு 62.  இளவரசனும்   அரசனும் அதிக வரி வாங்கி நாட்டு மக்களைத் துன்புறுத்திக் கொண்டிருந்தான் அந்நாட்டு அரசன். மக்கள் அனைவரும் ஒன்றுகூடித் தங்கள் மேல் கருணை காட்டுமாறு அரசனை மிகவும் மன்றாடி வேண்டினர். மறுநாள் அரசன் குடிமக்கள் அனைவரையும் அழைத்து, “தாங்கள் கோரிக்கைகளைப் பற்றிச் சிந்தித்தேன். இன்று முதல் நீங்கள் அனைவரும் வந்து, அரண்மனையிலிருந்து  ஒரு மூட்டை நெல் எடுத்துக் கொண்டுபோக வேண்டும். ஒரு மூட்டை அரிசியாகத் திருப்பிக் கொண்டுவந்து கொடுத்துவிட வேண்டும் . இது என்னுடைய உத்தரவு” என்றான். இதனால் மிக வருந்திய நாட்டு மக்கள் புலம்பவும், அரசனைத் திட்டவும் ஆரம்பித்தனர். இது அரசன் காதுக்கும் எட்டியது. சிறிது காலம் கழித்து அரசன் நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில், தான் குடிமக்களுக்குச் செய்த தவறு...