Posts

அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 98-100

Image
  ஃஃஃ  இலக்குவனார் திருவள்ளுவன்         25 March 2025         அ கரமுதல (அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 95-97 – தொடர்ச்சி) அறிவுக்கதைகள்   நூறு 98.  எது   அறிவு ? நாட்டு மன்னன் தன் நண்பனைப் பார்த்து, “என்ன எழுதிக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டான். நண்பன் சொன்னான் “நம்நாட்டில் உள்ள முட்டாள்களின் பெயர்களை எழுதிக் கொண்டிருக்கிறேன்” என்று. மன்னன் : எத்தனை பேர் இருக்கிறார்கள்? நண்பன் : நேற்றுவரை 6 பேர்களை எழுதி வைத்திருந்தேன். இன்று 7வது  நபராகத்  தங்கள் பெயரை எழுதிக் கொண்டிருக்கின்றேன். மன்னன் : [ஆச்சரியமுற்று] முட்டாள்களின் பெயர்களில் என் பெயருமா? நண்பன் : ஆம்! அரபு நாட்டான் ஒருவன் வந்தான். ஊரும் தெரியாது; பெயரும் தெரியாது! அவனிடம் போய் 5 குதிரைக்கு 500 பொன் பேசி குதிரை கொண்டு வரும்படி, முன்பின் யோசியாமல் பணத்தைக் கொடுத்தனுப்பியிருக்கிறீர்களே! இது முட்டாள்தனமல்லவா? மன்னன் : நாளைய தினம் அவன் குதிரைகளைக் கொண்டுவந்து அரண்மனையில் சேர்த்து விட்டால் நீ என்ன செய்வாய்? நண்பன் : நான் என்ன செய்...

ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 21 : வருணங்கள்

Image
  ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு  21 : வருணங்கள் ஃஃஃ    இலக்குவனார் திருவள்ளுவன்         21 March 2025         அ கரமுதல ( ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 20 –  பண்டைய பிராமணர்கள் இறைச்சி உண்ணல்-  தொடர்ச்சி ) ஆரியர்க்கு   முற்பட்ட   தமிழ்ப்பண்பாடு வருணங்கள் தென்னிந்தியச் சூத்திரகாரர்கள் வகுத்த வாழ்க்கைச் சட்டங்களெல்லாம் , முக்கியமாக, அக்கால அளவில், தமிழ்நாட்டில் மிகச் சிலராகவும், கோதாவரியப் பள்ளத் தாக்கின் தலைப்பில், மிகப் பலராகவும் வாழ்ந்திருந்த  பிராமணர்களைக் குறித்தனவே , அச்சூத்திரங்கள், நான்கு பெருஞ்சாதிகளையும், எண்ணற்ற கலப்புச் சாதிகளையும் குறித்துப் பேசுகின்றன என்றாலும், அவை கூறும் சட்டங்களில், ஏனையோரிலும், பிராமணர் குறித்தே , அவை தாமும் அக்கறை கொண்டுள்ளன ஆதலின் அவை கூறும் அச்சாதிக் கூறுபாடுகள், வெறும் தத்துவ அளவினவே ஆம். ஆரியர்களின் நால்சாதி அமைப்பு (சாதுர் வருணயம்) வேதகாலத்தில், ஆரிய வருத்தத்தில் மட்டுமே நடைமுறையில் இருந்த ஒன்று.  மகாபாரதப் போருக்குப் பின்னர் அருசு...

நாலடி நல்கும் நன்னெறி : நிலையாமை உணர்ந்து நல்லறம் புரிக!-இலக்குவனார் திருவள்ளுவன்

Image
  நாலடி நல்கும் நன்னெறி : நிலையாமை உணர்ந்து நல்லறம் புரிக!-இலக்குவனார் திருவள்ளுவன் ஃஃஃ    இலக்குவனார் திருவள்ளுவன்         20 March 2025        அகரமுதல நிலையாமை உணர்ந்து நல்லறம் புரிக! நாலடியார் துறவறவியலில் தொடங்கி முதலில் செல்வ நிலையாமை, இளமை நிலையாமை குறித்துக் கூறுகிறது. மூன்றாவதாக  யாக்கை நிலையாமை யை உரைக்கிறது. யாக்கை என்பது உடலைக் குறிக்கிறது.  யாத்தல் என்றால் கட்டல் என்று பொருள். இதிலிருந்து யாக்கை வந்தது .  எலும்பு, தசை, தசை நார், இழைகள், உள்ளுறுப்புகள் முதலியவற்றைக் கொண்டு கட்டமைக்கப்பட்டதால் யாக்கை எனப் பெயர் பெற்றது.  மூன்று அதிகாரத் தலைப்பு கூறும் நிலையாமை குறித்து மணிமேகலை முன்னரே இளமையும்  நில்லா;  யாக்கையும்  நில்லா; வளவிய  வான்பெரும்  செல்வமும்  நில்லா; (சிறைசெய் காதை: 135-136) எனக் கூறியுள்ளது. திருமூலர், திருமந்திரத்தில் நிலையாமையைப் பாடியுள்ளார். பாடல் எண் 187 முதல்  211 வரை யாக்கை நிலையாமை குறித்துக் கூறுகிறார்.  சித்தர்களும்  யாக்கை நில...

அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 95-97

Image
  அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 95-97 ஃஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன்         18 March 2025        அகரமுதல ( அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 92-94 – தொடர்ச்சி ) அறிவுக்கதைகள் நூறு 95.  மறதி ! ஒரு பெரியவர் தொடர்வண்டியில் பயணம் செய்து கொண்டு இருந்தார். பயணச்சீட்டு பரிசோதகர் எல்லாரிடமும் கேட்டு சரிபார்த்து விட்டு இவரிடமும் வந்து பயணச்சீட்டு கேட்டார். இவர் தன் சட்டைப்பையைப் பார்த்துவிட்டு பணப் பையையும் பார்த்துவிட்டு கைப்பையையும் பெட்டியையும் பார்த்துத் தேடிக் கொண்டே இருந்தார். பயணச்சீட்டை சரிபார்ப்பவர் இவரின் தோற்றத்தைப் பார்த்து, “பெரியவர் பயணச்சீட்டைக் கட்டாயம் வாங்கியிருப்பார். வைத்த இடம் தெரியாமல் தேடிக்கொண்டே இருக்கிறார் என்றெண்ணி “பெரியவரே, பரவாயில்லை; நீங்கள் துன்பப் படவேண்டா, அமைதியாக இருங்கள்.” என்று சொல்லிவிட்டு அடுத்தப் பெட்டிக்குப் போய்விட்டார். சிறிதுநேரம் கழித்து பயணச்சீட்டை சரி பார்ப்பவர் அந்தவழியாக வரும்போது, பெரியவர் மறுபடியும் தேடிக் கொண்டிருப்பதைக் கண்டு, “பெரியவரே, நான் த...

ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 20: புலவர் கா.கோவிந்தன் – பண்டையபிராமணர்கள்இறைச்சிஉண்ணல்

Image
  ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 20: புலவர் கா.கோவிந்தன் – பண்டையபிராமணர்கள்இறைச்சிஉண்ணல் ஃஃஃ    இலக்குவனார் திருவள்ளுவன்         14 March 2025         அ கரமுதல ( ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 19 : வட இந்தியாவும்தென் இந்தியாவும் –   தொடர்ச் சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு ‘’ பௌதாயன தரும சூத்திரங்கள் (Sacred Text Book of the East . : பகுதி 14) என்ற தம்முடைய மொழி பெயர்ப்பு நூலில், திருவாளர்  பூலர் (Buhler ) அவர்கள், அண்ணன் மகனுக்கும், தங்கை மகளுக்கும் போலும் உடன் பிறந்தார் இருவரின் மக்களுக்கு இடையிலான திருமணமாக, ‘’ மாவல பித்(து)ர்ஃச் வரர் துஃகித், கமனம் ” என்ற திருமணத்தைத் தவறான நிலையில் பொருள் கொண்டுள்ளார். இவைபோலும் திருமணங்கள், தென்னிந்தியாவில் முறையானவையே ஆகும். இற்றைய நாளில்,  தெலுங்கு பிராமணர்களிடையே, உண்மையில், இது கட்டாயமாம் ; ஏனைய தென்னிந்திய பிராமணர்களிடையேயும் இதுவே பெரும்பாலான வழக்கமாம். தெலுங்கு பிராமணரல்லாதாரிடையே, தென்னாட்டுப் பிராமணரிடையே நன்கு தெரிந்த வழக்கம...