Posts

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 69 : சங்கப் புதையலும் – சிலம்பின் சான்றும்

Image
     ஃஃஃ        இலக்குவனார் திருவள்ளுவன்         03 October 2024         அ கரமுதல (கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 68 : 14. சுவடியின் மரபு தெரிவுறு காதை-தொடர்ச்சி) பூங்கொடி சங்கப் புதையலும் – சிலம்பின் சான்றும் இத்தகு பகைஎலாம் எதிர்த்துத் தப்பின            பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்,அச்         25           சங்கப் புதையலும் சாமி நாதத் துங்கன் உழைப்பால் தோண்டி எடுத்தோம்; சிற்றூர் யாங்கணுஞ் சென்றுசென் றோடிப் பெற்றஅவ் வேடுகள் பெருமை நல்கின;           இத்தொகை நூல்களும் புத்தக உருவில் 30           வாரா திருப்பின் வளமிலா மொழிஎன நேரார் பழித்து நெஞ்சம் மகிழ்வர்; நல்லோன் தந்தனன் நம்புதை பொருளெலாம், செல்லார் குழுவும் சிதைக்கா தொழிந்தது;                நல்லோய்!  இசையும் நாடகச் சுவடியும் 35           வல்லோன் விழிக்கு மறைந்தன போலும்! அகப்பட் டிருப்பின் ஆவணப் பேச்சைத் தகர்த்தெறிந் தொழிப்பேன்; சுவடிகள் தவறினும் அந்நூல் தமிழுக் கிலையென் றறைதல்            அளப்பே யாகும் அவ்வுரை நம்பேல்!       40           அளப்பரும் புகழ்நூல் சிலப்பதி கார உரைதரும் ஆசான் அடியார்க்கு நல்லான் புரையற உரைத்தது புலமுளோர்

அறிவுக் கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 30-32

Image
    ஃஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன்         01 October 2024         அ கரமுதல (அறிவுக் கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 27-29-தொடர்ச்சி) அறிவுக்   கதைகள்   நூறு 30.  மோட்சமும்   நரகமும் ! மாலை வேளையில் உப்பரிகையில் உலவிக் கொண்டிருந்த தாசியொருத்தி, கீழேயிருந்த தன் வேலைக்காரியை அழைத்து, “நம் வீதி வழியே ஒரு பெரியவரின் சடலம் இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. நீ போய் அவரது ஆன்மா மோட்சத்துக்குப் போகிறதா – நரகத்துக்குப் போகிறதா என்று பார்த்து வா” என்றாள். மறுநிமிடமே, அவள் திரும்பிவந்து, “அம்மா, அந்த ஆன்மா மோட்சத்துக்குப் போய்விட்டது” என்று சொன்னாள். இவற்றையெல்லாம் திண்ணையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு சந்நியாசி, வியந்துபோய் வேலைக்காரியின் காலைப் பிடிக்காத குறையாகக் கெஞ்சுகிறார். “அம்மா அறுபது ஆண்டுகளாக உலகம் முழுவதும் சுற்றி. இறந்த ஆன்மா எங்கே போகிறது என்று ஆராய்ந்து வருகிறேன். பல பெரியோர்களை அணுகியும் விச்சாரித்தேன். இன்னும் எனக்கு விடை கிடைக்கவில்லை. இப்போது நீதான் என் குரு. ஓர் ஆன்மா மோட்சத்துக்குப் போகிறதா, அல்லது நரகத்துக்குப் போகிறதா என்னும் கலையை அறிவது எப்படி?” என்று வே

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார்,23, குறிப்பு

Image
     ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         27 September 2024         அ கரமுதல ( என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார்,22,பொதுவறு சிறப்பின் புகார் பிற்பகுதி தொடர்ச்சி ) என் தமிழ்ப்பணி குறிப்பு இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தின் வரலாற்றில் தனக்கென ஒரு சிறப்பிடத்தைப் பெறத்தக்க வகையில் நல்ல தமிழ் அறிஞராக, வரலாற்றுத் திறனாய்வாளராக, செந்தமிழ்ப் பேச்சாளராக இலக்கியப் படைப்பாளராக, பாதை மாறாத பகுத்தறிவுவாதியாக, அப்பழுக்கற்ற அரசியல் தலைவராக, தமிழ்நாடு சட்டமன்றம் பேரவைத் தலைவராக, எனப்  பல்திறன் படைத்த நற்றமிழ்ப் புலவராக விளங்கியவர் , புலவர். கா. கோவிந்தனார் அவர்கள், “ தமிழுக்கும், தமிழ்ப் புலவர்கட்கும், தமிழ் நாட்டுக்கும் தொண்டாற்றத் தன்னையே அருப்பணித்தவர்” என்று பேரறிஞர் அண்ணா  அவர்களால் பாராட்டப் பெற்று, திருவண்ணாமலை குன்றக்குடி ஆதினத்தாரின் “ புலவரேறு ” பட்டம், தமிழக அரசின் “ திரு. வி. க. விருது ”, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின்  “தமிழ்ப்பேரவைச் செம்மல்.”  பட்டம் போன்ற சிறப்புகளையும் பெற்ற புலவர் அவர்களின் தமிழ்ப்பணி பொன்விழாக் கண்ட பெருமையினையுடையது. 000

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 68 : 14. சுவடியின் மரபு தெரிவுறு காதை

Image
      ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         26 September 2024         அ கரமுதல (கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 67 : கயவர் தாக்குதல்-தொடர்ச்சி) பூங்கொடி, சுவடியின் மரபு தெரிவுறு காதை கூடலில் மீனவன் பணி ஆங்கவன் றனக்குப் பூங்கொடி நல்லாய்! தீங்கொன் றுற்றது செப்புவென் கேண்மோ! கேட்குநர் உள்ளம் கிளர்ந்தெழும் பாடல், நோக்குநர் மயக்கும் நுண்கலை ஓவியம், கள்ளின் சுவைதரு காவியம் முதலன 5 வள்ளலின் வழங்கினன் வருவோர்க் கெல்லாம்; அவ்வவர் திறனும் அறிவும் விழைவும் செவ்விதின் ஆய்ந்துணர்ந் தவ்வவர்க் குரியன பயிற்றினன், பயில்வோர் பல்கினர் நாடொறும்; மாணவன் ஐயம் செயல்திறம் நற்பயன் செய்துவரு காலை 10 `இசையும் கூத்தும் இயம்பும் தமிழ்நூல் நசையுறும் ஓவியம் நவில்நூல் உளவோ? ஒருநூ லாயினும் உருவொடு காண்கிலேம்; எனஓர் ஐயம் எழுப்பினன் ஒருவன்; தமிழின் பகைகள் மனநலி வுற்று மற்றவற் குரைப்போன் 15 `பலப்பல அந்நூல் படைத்தது தமிழ்மொழி நிலைத்திடு சான்றுகள் நிறைதலும் காண்குவை; நெருப்பும் நீரும் செருத்தொழில் புரிந்தன; உருக்குலைந் தொழிந்தன ஓங்குயர் நூல்பல; ஆடிப் பெருக்கில் ஆற்றொடு விடுத்தனம்; 20 தேடிச் சுவைத்தன செல்லுப் பூச்சிகள் எ

அறிவுக் கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 27-29

Image
   ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         24 September 2024         அ கரமுதல ( அறிவுக் கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 24-26- தொடர்ச்சி ) அறிவுக் கதைகள் நூறு 27.  கலை   நுணுக்கம் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் நடைபெறும் கலைமகள் விழாவிற்கு வரும் புலவர்களுக்குக்கெல்லாம். இராமநாதபுரம் மன்னர் பரிசளித்து அனுப்புவது வழக்கம். சிறப்பான முறையில் விருந்தும், இருபத்தைந்து ரூபாய் பணமுடிப்பும் உண்டு. ஒன்பதாம் நாள் இரவு, பெருமாள் மாடு வேடம் பூண்ட இருவர் அரசனைச் சந்தித்து ஆடிப்பாடி மகிழ்வித்தனர். அப்போது அரசன் தன் கைப்பிரம்பால் மாறு வேடம் பூண்டவனை ஒரு தட்டுத் தட்டினார். உடனே முகமலர்ந்து மகிழ்ச்சியோடு, அவனுக்கு ஐம்பது ரூபாய்ப் பணமுடிப்பைப் பரிசாகக் கொடுத்தார். இது கண்ட அரசவைப் புலவர், மன்னரிடம், “அரசே! மற்றப் புலவர்களுக்கெல்லாம் 25 ரூபாய்தானே பரிசு கொடுத்தீர்கள். இவனுக்கு மட்டும் தாங்கள் 50 ரூபாய் கொடுத்ததன் காரணத்தை நாங்கள் அறியலாமா?” என்று பணிவோடு வேண்டினார். அரசன் சொன்னார், ‘பெருமாள் மாடு வேடம் பூண்டவனுக்கு உண்மையிலேயே கலையுணர்வு இருக்கிறதா? அல்லது பரிசு பெறுவதற்காக மட்டும். வேடம் பூண்டவனா?

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார்,22, பொதுவறுசிறப்பின் புகார் பிற்பகுதி

Image
     ஃஃஃ        இலக்குவனார் திருவள்ளுவன்         20 September 2024         அ கரமுதல ( என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார்,21, பொதுவறு சிறப்பின் புகார்-தொடர்ச்சி ) என் தமிழ்ப்பணி பொதுவறு சிறப்பின்  – பிற்பகுதி மகதச் சிற்பரும், மராட்டக் கொல்லரும், யவனத் தச்சரும், கூடிக் கண்ணை கவரும் வனப்புடன் அமைத்த அரசன் பெருங்கோயில் இருப்பது பட்டினப்பாக்கம்; பெரு வாணிகத் தெருவும், மன்னரும் விழையும் மாநிதி படைத்த வாணிகப் பெருமக்களின் மாட மாளிகைகள் நிறைந்த நெடிய வீதியும், வேதம் வல்லமறைவோரும். வேள்குடிவத்தோரும் வாழும் வீதிகளும், அரண்மனையைச் சூழ் அமைந்திருந்தன. மருத்துவரும், நாளறிந்து கூறும் கணியரும் தனித்தனியே வாழும் வீதிகளும், முத்துக் கோப்போர், வளையல் அறுப்போர் நாழிகைக் கணக்கர், காவற்கணிகையர், நாடகமகளிர், நகை வேழம்பர் முதலானோர் வாழும் வீதிகளும் ஆண்டே; கடும்பரி கடவுநர் களிற்றின்பாகர், நெடுந்தேர் ஊருநர், கடுங்கண் மறவர் என்ற நாற்படை வீரர்கள் வாழும் வீதிகள் அரண்மனைக்கு அணித்தாகவே அமைந்திருந்தன. 13 வடவேங்கடம் தென்குமரிகட்கு இடைப்பட்ட தமிழகம் முழுவதையும் தன் ஆணைக்கீழ்க் கொண்டு வந்து அடக்கிய பின்னர், கரிகா