அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 98-100
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 25 March 2025 அ கரமுதல (அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 95-97 – தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 98. எது அறிவு ? நாட்டு மன்னன் தன் நண்பனைப் பார்த்து, “என்ன எழுதிக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டான். நண்பன் சொன்னான் “நம்நாட்டில் உள்ள முட்டாள்களின் பெயர்களை எழுதிக் கொண்டிருக்கிறேன்” என்று. மன்னன் : எத்தனை பேர் இருக்கிறார்கள்? நண்பன் : நேற்றுவரை 6 பேர்களை எழுதி வைத்திருந்தேன். இன்று 7வது நபராகத் தங்கள் பெயரை எழுதிக் கொண்டிருக்கின்றேன். மன்னன் : [ஆச்சரியமுற்று] முட்டாள்களின் பெயர்களில் என் பெயருமா? நண்பன் : ஆம்! அரபு நாட்டான் ஒருவன் வந்தான். ஊரும் தெரியாது; பெயரும் தெரியாது! அவனிடம் போய் 5 குதிரைக்கு 500 பொன் பேசி குதிரை கொண்டு வரும்படி, முன்பின் யோசியாமல் பணத்தைக் கொடுத்தனுப்பியிருக்கிறீர்களே! இது முட்டாள்தனமல்லவா? மன்னன் : நாளைய தினம் அவன் குதிரைகளைக் கொண்டுவந்து அரண்மனையில் சேர்த்து விட்டால் நீ என்ன செய்வாய்? நண்பன் : நான் என்ன செய்...