கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 69 : சங்கப் புதையலும் – சிலம்பின் சான்றும்
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 03 October 2024 அ கரமுதல (கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 68 : 14. சுவடியின் மரபு தெரிவுறு காதை-தொடர்ச்சி) பூங்கொடி சங்கப் புதையலும் – சிலம்பின் சான்றும் இத்தகு பகைஎலாம் எதிர்த்துத் தப்பின பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்,அச் 25 சங்கப் புதையலும் சாமி நாதத் துங்கன் உழைப்பால் தோண்டி எடுத்தோம்; சிற்றூர் யாங்கணுஞ் சென்றுசென் றோடிப் பெற்றஅவ் வேடுகள் பெருமை நல்கின; இத்தொகை நூல்களும் புத்தக உருவில் 30 வாரா திருப்பின் வளமிலா மொழிஎன நேரார் பழித்து நெஞ்சம் மகிழ்வர்; நல்லோன் தந்தனன் நம்புதை பொருளெலாம், செல்லார் குழுவும் சிதைக்கா தொழிந்தது; நல்லோய்! இசையும் நாடகச் சுவடியும் 35 வல்லோன் விழிக்கு மறைந்தன போலும்! அகப்பட் டிருப்பின் ஆவணப் பேச்சைத் தகர்த்தெறிந் தொழிப்பேன்; சுவடிகள் தவறினும் அந்நூல் தமிழுக் கிலையென் றறைதல் அளப்பே யாகும் அவ்வுரை நம்பேல்! 40 அளப்பரும் புகழ்நூல் சிலப்பதி கார உரைதரும் ஆசான் அடியார்க்கு நல்லான் புரையற உரைத்தது புலமுளோர்