க௯.இளந்தமிழ்த் தலைமுறையே, என்ன செய்யப் போகிறாய்? – திருத்துறைக் கிழார்
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 18 January 2026 அ கரமுதல (கஅ. தமிழர் காலக்கணிப்பு முறை : தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் க௯.இளந்தமிழ்த் தலைமுறையே, என்ன செய்யப் போகிறாய்? க. உன் தாய்மொழி பல வகையிலும் உருக் குலைக்கப்படுகிறது. உ. உன் இனமக்கள் பெயர்கள் தமிழாக இல்லை ௩. உனது நாட்டுக் கடைத்தெருக்களில் உள்ள பெயர்ப் பலகைகள் தமிழில் எழுதப்படவில்லை! வேற்றுமொழிச் சொற்களைத் தமிழ் எழுத்துகளால் எழுதியுளர். ௪. உனது நாட்டு மக்கள் நாவில் வேற்றுமொழிச் சொற்களே விளையாடுகின்றன. அரசு அலுவலகங்களில் நடைமுறைகள் தமிழில் இல்லை. ரு. உனது பண்டைய பண்பாடு, வரலாறுகள் இருட்டடிப்பு செய்யப் படுகின்றன. ௬… இந்திய வானொலி, தொலைக்காட்சி நிலையங்கள் உன...