Posts

ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 28: புலவர் கா.கோவிந்தன் : அசோகனும் தமிழ்நாடும்

Image
ஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன்         09 May 2025         அ கரமுதல (ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு     27: சந்திரகுப்புதனும் தென் இந்தியாவும்-தொடர்ச்சி) ஆரியர்க்கு   முற்பட்ட   தமிழ்ப்பண்பாடு  . . . .  அசோகனும் தமிழ்நாடும் ஆனால், அசோக வருத்தனன் காலத்திலும், தமிழ்நாடு, மகத ஆட்சி எல்லைக்கு வெளியிலேயே இருந்துவந்துள்ளது. மக்களின் நோய் தீர்க்கவும் மாவினங்களின் நோய் தீர்க்கவும், அவன் நிறுவிய இரு நிறுவனங்கள் குறித்துப் பேசும் , அவனுடைய இரண்டாவது பாறைக்கல்வெட்டில், சோழ, பாண்டிய, சத்திரிய புத்திர, கேரள புத்திரர்களை “அந்த” அஃதாவது அண்டை நாட்டவர் அல்லது எல்லைப் புறத்தில் உள்ளார், என்றே குறிப்பிட்டுள்ளான். அவனுடைய 13ஆவது கல்வெட்டில், தெற்கில் தம்பண்ணி அதாவது தாம்பரபரணி வரையான சோழ பாண்டிய நாடுகளில் தரும விசயத்தில் வெற்றி கொண்டதாகக் கூறுகிறான். உலகிற்கு உபதேசிப்பதில் அவன் பெருமகிழ்வு கண்ட, பிராமண, சமண, பெளத்த சமயப் பேராசிரியர்கள் வழங்கும் அறிவுரைகளின் ஒன்றுபட்ட தொகுப்புத் ...

திருத்துறைக் கிழார் கட்டுரைகள் – க௪. தமிழுக்குச் சிறை?

Image
ஃஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         08 May 2025         அ கரமுதல (திருத்துறைக் கிழார் கட்டுரைகள் – க௩. தமிழ் வாழுமா? வளருமா? – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் க௪. தமிழுக்குச் சிறை? இன்று வாழும் தமிழ் மக்களுக்குத் தாங்கள் பயன்படுத்தும் சொற்கள் தமிழ்ச்சொற்களா? வேற்றுமொழிச் சொற்களா? எனத் தெரியாது . ஏனெனில், இடைக்காலத்தில் தமிழகத்தில் ஆரியம் புகுந்து, தன் மொழி சமற்கிருதத்தைத் தமிழுடன் கலந்து எழுதி, தமிழும், வடமொழியும் (சமற்கிருதம்) கடவுளின் (சிவனின்) இருவிழிகள் என்றும் சமற்கிருதம் “தேவபாசை” என்றும் கதைகட்டி விட்டனர். இதுகொண்டு தமிழ்மக்கள் மயங்கி தமிழ்ச் சொற்களை விட்டு வடமொழிச் சொற்களை மிகுதியாகக் கலக்கத் தொடங்கினர். இதனையறிந்த ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியர், ‘வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லாக் கும்மே’ என்று ஒரு நூற்பாவழி சிறு கட்டுப்பாடு விதித்தார். இவ்விதியைப் பின்பற்றி நூல் யாத்தவர் கம்பரும் வில்லிபுத்தூராருமாவர். இருப்பினும், தமிழர் மயக்கந்தீரவில்ல...

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 94: வஞ்சியின் எழுச்சியுரை

Image
ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         07 May 2025         அ கரமுதல (கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 93: கோமகன் நிகழ்ந்தன கூறல்-தொடர்ச்சி) பூங்கொடி வஞ்சியின் எழுச்சியுரை           கருதிய காதற் களந்தனில் நீதான்           ஒருமுறை இறங்கினை, திரும்பினை வறிதே! 180           காதல் எளிதெனக் கருதினை போலும் சாதல் எய்தினும் சலியா துழைப்பின் விரும்பிய வெற்றி அரும்புவ துறுதி; நால்வகை முயற்சியும் நயவா தொருமுறை             தோல்வி கண்டுளம் தொய்ந்தனை யாயின்    185           ஆண்மை என்றதை அறைதலும் உண்டோ? நாண்மடம் பூண்ட நங்கையர் தம்மனம் எளிதாய் இசைந்திடின் பெண்மையும் ஏது? மறுத்தும் வெறுத்தும் மாறியும் சீறியும்            தடுத்தும் உரைப்...

ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 27: புலவர் கா.கோவிந்தன்: சந்திரகுப்புதனும் தென் இந்தியாவும்

Image
  ஃஃஃ        இலக்குவனார் திருவள்ளுவன்         02 May 2025         அ கரமுதல (ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு    26 : சேர, சோழ, பாண்டிய அரசுகள் – தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு . . . .        கி.மு. நான்காம் நூற்றாண்டில், வட இந்தியாவுக்கும், தென்னிந்தியாவுக்கும் இடையிலான வாணிகம், எப்போதும் இருந்திராத அளவு மிகப்பெரிய அளவினை அடைந்திருந்தது. இது குறித்துக்  கெளடில்யர்  கூறியன அனைத்தையும், அப்படியே முழுமையாகத் தருகின்றேன். “நிலவழி நெடுஞ்சாலையைப் பொறுத்தமட்டில், இமாலயத்திற்குச் செல்லும் வழி, தட்சிண பரதத்திற்குச் செல்லும் வழியினும் மேலானது என்று கூறுகிறார் ஆசிரியர். வெகு தொலைவில் உள்ள முன்னதிலிருந்து யானைகள், குதிரைகள், நறுமணப் பொருள் வகைகள், தந்தம், தோல் மிகமிக நேர்த்தியான பொன், வெள்ளி அணிகலன்கள் வந்தன. அப்படி இல்லாமல், ஆட்டு மயிர்க்கம்பளங்கள் நீங்கலாக, தோல் குதிரை, சங்குகள், வைரம், நீலம் முதலாம் மாணிக்கங்கள், பொன்னாலான அணிகலன்கள் தட்சிண பாரதத்திலி...

திருத்துறைக் கிழார் கட்டுரைகள் – க௩. தமிழ் வாழுமா? வளருமா?

Image
  ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         01 May 2025         அ கரமுதல (௰உ. பேச்சுவழக்கில் பிழையாகப் பலுக்கப்படும்   சொற்களும் திருத்தமும் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் க௩. தமிழ் வாழுமா? வளருமா?    க.  தமிழ் மக்களின் பேச்சிலும், எழுத்திலும் தமிழில்லை!    உ. தமிழ்மக்களின் பெயர்கள் தமிழாக இல்லை!    ௩. தமிழ்நாட்டில் உள்ள ஊர்ப்பெயர்கள் பல தமிழில்       இல்லை!    ௪. தமிழர் எழுதும் நூல்கள் தமிழில் முழுமையாக       எழுதப்பெறவில்லை.    ரு. தமிழகப் பாடநூல் நிறுவனத்தார் முதல் வகுப்புக்குரிய       தமிழ்ப்பாட நூலில் வடமொழி ஒலியெழுத்துகளாம்        கிரந்த எழுத்துகளை (ஸ, ஷ, ஹ, ஜ, க்ஷ ) சேர்த்து,       வடமொழிச் சொற்களையும் பாடப்பகுதியில்       இணைத்து உள்ளனர். பிஞ்சு உள்ளத்தில் ...

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 93: கோமகன் நிகழ்ந்தன கூறல்

Image
  ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         30 April 2025         அ கரமுதல ( கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 92 : வஞ்சியின் வஞ்சினம்- -தொடர்ச்சி) பூங்கொடி 19.  கோமகன்   மீண்டும்   தோன்றிய   காதை கோமகன் நிகழ்ந்தன கூறல்           இழுக்கல் நிலத்திடை இடர்ப்பட் டேகுவோன்            வழுக்கல் தவிர்க்க வாய்த்தகோல் இவளென  135           வஞ்சிக் குரைப்போன், முகுந்தன் வாய்மொழி தன்செவி கேட்டுத் தென்புலப் பொழிலுட் பூங்கொடி காண்பான் போய்ப்புகுந் ததூஉம், தாங்கா வேட்கை தாங்கவோன் றன்னைக்                கண்டு வெரீஇக் கற்றோர் பலர்தாம்       140           மண்டும் படிப்பகம் மங்கைபுக் கதூஉம், மெல்லியல் அல்லியை மேவி விருப்பைச் சொல...