Posts

Showing posts from October, 2015

திருக்குறள் அறுசொல் உரை – 075. அரண் : வெ. அரங்கராசன்

Image
பேரா. வே. அரங்கராசன்      25 அக்தோபர் 2015       கருத்திற்காக.. (அதிகாரம் 074. நாடு தொடர்ச்சி) 02. பொருள் பால் 08. அரண் இயல் அதிகாரம்   075. அரண்  நாட்டிற்குத் தேவையான இயற்கை , செயற்கைப் பாதுகாப்பு அமைப்புக்கள் . ஆற்று பவர்க்கும், அரண்பொருள்; அஞ்சித், தம்    போற்று பவர்க்கும் அரண்.   போரைச் செய்வார்க்கும், அஞ்சுவார்க்கும் கோட்டையே தக்கதோர் பாதுகாப்பு. மணிநீரும், மண்ணும், மலையும், அணிநிழல்    காடும், உடைய(து) அரண். ஆழ்அகழி, வெட்டவெளி, மலைகள் காடுகள் கொண்டது அரண். உயர்(வு),அகலம், திண்மை, அருமை,இந் நான்கின்    அமை(வு)அரண் என்(று),உரைக்கும் நூல். உயர்வு, அகலம், உறுதி, நெருங்க முடியாமை அரண்இயல். சிறுகாப்பில் பேர்இடத்த(து) ஆகி, உறுபகை    ஊக்கம் அழிப்ப(து) அரண்.                        சிறுவாயில், பெரிய உள்இடம் கொண்டு பகைஅழிப்பது கோட்டை. கொளற்(கு)அரிதாய்க் கொண்டகூழ்த்(து) ஆகி அகத்தார்    நிலைக்(கு)எளி(து)ஆம் நீர்அ(து) அரண்.                     வெல்லக் கடியது; உணவுக்கு, உள்வீரர்க்கு எளியது, அரண

திருக்குறள் அறுசொல் உரை – 074. நாடு : வெ. அரங்கராசன்

Image
பேரா. வே. அரங்கராசன்      25 அக்தோபர் 2015       கருத்திற்காக.. (அதிகாரம் 073. அவை அஞ்சாமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 07. நாட்டு இயல்   அதிகாரம் 074. நாடு     நாட்டின் இலக்கணம் , சிறப்புகள் , நாட்டு மக்கள்தம் பண்புகள் . தள்ளா விளையுளும், தக்காரும், தாழ்(வு)இலாச்    செல்வரும், சேர்வது நாடு.         தொடர்விளைவு, தக்கார், உயர்மனச்        செல்வர், இருப்பது நல்நாடு. பெரும்பொருளால் பெள்தக்க(து) ஆகி, அரும்கேட்டால்    ஆற்ற விளைவது நாடு.          பெரும்பொருளால், கேடும் இல்லா        நிறைவிளைவால், அமைவது நாடு. பொறைஒருங்கு மேல்வரும்கால் தாங்கி, இறைவற்(கு)      இறைஒருங்கு நேர்வது நாடு.                                      சுமைகளைத் தாங்கி, நேர்மையாய்        வரிதருவோரைப் பெறுவதே நாடு. உறுபசியும், ஓவாப் பிணியும், செறுபகையும்,    சேரா(து) இயல்வது நாடு.                     கொடும்பசி, தீராநோய், அழிபகை,        சேராது நிற்பது சீர்நாடு. பல்குழுவும், பாழ்செய்யும் உள்பகையும், வேந்(து)அலைக்கும்    கொல்குறும்பும்,

நூலில் நீக்க வேண்டிய சிதைவுகள் – தொல்காப்பியர்

Image
இலக்குவனார் திருவள்ளுவன்      25 October 2015       No Comment நூலில் நீக்க வேண்டிய சிதைவுகள் சிதைவெனப் படுபவை வசையற நாடின், கூறியது கூறல், மாறுகொளக் கூறல், குன்றக் கூறல், மிகைபடக் கூறல், பொருள்இல் கூறல், மயங்கக் கூறல், கேட்போர்க் குஇன்னா யாப்பிற் றுஆதல், தன்னான் ஒருபொருள் கருதிக் கூறல் என்ன வகையினும் மனம்கோள் இன்மை, அன்ன பிறவும் அவற்றுவிரி ஆகும். தொல்காப்பியர், தொல்காப்பியம், மரபியல்: 110 ( அகரமுதல 102   ஐப்பசி 08, 2046 / அக். 25 .10.2015 )